Tuesday, April 21, 2009

நேர்மைத் திறனும் வஞ்சகமும் ...

அஞ்சடிக்காரர்களுக்கு வணக்கமும் வருத்தங்களும்...

நாம் உகந்த பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறோமா என்றால் உடனடியாக அதற்கான பதிலைச் சொல்ல முடியும். இல்லை என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும் அந்த பதில். அஞ்சடியின் ஆகக் கடைசி எதிர்வினைகளை வாசிக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.அதனால் நாட்டின் இலக்கியத்திற்கு எந்தவகையிலும் நன்மை கிட்டப்போவதில்லை. எனினும் காலம் மனிதர்களின் முகங்களைக் காட்டத் தவறுவதில்லை. அவர்களாகவும் காட்டிக் கொடுத்து விடுகின்றனர்.

ஒரு சர்ச்சை முடிவுற்றது எனும் அமைதியில் திளைத்திருந்த போது, ஏன் மீண்டும் நீங்களாகவே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, எதிர்வினையைத் தொடங்கியிரு க்கிறீர்கள் பாலமுருகன்? உங்களின் ஆகக் கடைசி எதிர்வினையும்,அதற்கு முந்திய எதிர்வினையும் என்ன சொல்ல வருகின்றன என முதலில் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்களா ? அவ்விரண்டுக்கும் அடிப்படையிலேயே எழுந்துள்ள முரணை நீங்கள் உணரவில்லையா? ஏன் அவ்வப்போது மாறுபடுகிறீர்கள் பாலா ? உங்களின் தவிர்க்கப்பட வேண்டிய கருத்துக்கள் அல்லது பகிர்வுகள்தான்இங்கு மீண்டும் மீண்டும் வெறுப்பு தோன்ற குரோதம் துளிர்க்க காரணமாகி இருக்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அது நிகழுமாயின் அதனால் எழக்கூடிய பாதகங்கள் மிகவும் கொடுமையானது என்பதை உணர வேண்டும்.

உங்களின் ஆகக் கடைசி இரு எதிர்வினைகளில் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்றும் தெரியவில்லை. ஆனாலும் அது உங்களின் எழுத்துச் சுதந்திரம். என்றாலும் உங்களின் சுதந்திரம் மற்றவர்களைச் சீண்டுவது அல்ல.எனக்குத் தெரிய வேண்டிய/ விளக்கம் அறிய வேண்டிய இரு விஷயங்கள் உண்டு.

1) நீங்கள் பயன்படுத்தியிருக்கும் பிச்சை என்கிற சொல் நீங்கள் எல்லாம் எழுத்தாளரா என வினவத் தோன்றுகிறது. அந்த சொல்லின் காட்டம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள்..ஆனால் வேண்டுமென்றே நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றும் எனக்கு இப்போது தோன்றுகிறது.எங்களைப் போல் ஏழைகள், பரம ஏழைகள் என்ன செய்வார்கள் பாலமுருகன்? என்ன செய்ய முடியும் எங்களால்? பிச்சை-தான் கேட்க முடியும்.போடுகிறவர்கள் போடலாம்.விருப்பம் இல்லையென்றால் நீங்கள் போடாமல் சென்றுக் கொண்டே இருக்கலாம். உங்களை யாரும் குற்றம் கூற மாட்டார்கள்.பிச்சை இடுவதைத் தவிர்ப்பதால் நீங்கள் பாவி ஆகி விட மாட்டீர்கள.நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு எழுதுவதை எல்லாம் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இதனை நான் இங்குதான் எழுத கடமைப்பட்டுள்ளேன்.தனிப்பட்ட முறையில் கருத்துரைக்க அல்ல. இதனைத் தொடர்ந்து எழும் எதிர்வினைகளுக்கும் நான் பொறுப்பேற்பேன். பிச்சை கேட்கிறீர்கள் என அவ்வளவு சுலபமாக உங்களால் எழுத முடிகிறது என்றால் வல்லினத்தைப் பற்றியும் அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களைப் பற்றியும் நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.நவீன் ஆசிரியர் என்றால் அதற்கு நானும் பொறுப்பேற்பதால் உங்களின் சொல் என்னையும் வந்து தாக்குகிறது. ஆனால் உங்களுக்கு அதில் எல்லாம் கவலை இல்லை. தொடர் விளைவைப் பற்றியும் நீங்கள் எங்கே எண்ணியிருக்க போகிறீர்கள்? நல்ல காரியத்தைச் செய்வதற்கு நம்மால் முடியாத நிலையில், பிச்சையின் வழி அதனைச் செய்ய முடியும் என்றால் அதை நிறைவேற்றுவதில் தவறு இல்லை. ஆனால் இக்கருத்து நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இதற்கு பின்னர் நான் எப்படி உங்களிடம் பேசுவது அல்லது எப்படி உங்களை எதிர்கொள்வது? நினைக்கவே சிரமமாக உள்ளது. ஒன்றைச் சொல்கிறேன்.பிச்சையிட உங்களின் கரம் அனுமதிக்க வில்லை என்றால், பிச்சை பற்றி பேசாதீர்கள். உங்களுக்குப் பதிலாக பிச்சை போட என்னால் முடியும்; தேவை ஏற்பட்டால்...

2) ஓர் எழுத்தாளர் நவீன் பற்றி கூறியது குறித்து நீங்கள் எப்படி அவரை இடித்துரைக்க முடியும்? யார் அந்த எழுத்தாளர்? அவர் உங்களிடம் சொன்னால், அதை நீங்கள் உங்களிடமே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே...அதைச் சுட்டிக் காட்டி பேசுகிற சுதந்திரத்தையும் துணிச்சலையும் யார் உங்களுக்கு அளித்தது ? உங்களுடைய சுதந்திரம் அடுத்தவரின் தனிப்பட்ட விவகாரங்களைப் பேசுவதில் இல்லை என்பதை நீங்கள் அறியவில்லையா ? நவீன், கெஞ்சினாலும்- கொஞ்சினாலும் அவர் எதற்காக அதைச் செய்தார் என்று உங்களுக்குச் சிந்திக்கத் தோன்றவில்லையா? உதவி கோருவது தவறா ? அல்லது உதவி செய்து விட்டு, நான் தான் உதவினேன் என தம்பட்டம் அடித்துக் கொள்வது தவறா ? செய்த உதவியைச் சுட்டிக் காட்டுவது சரியா ? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?

இன்று உயர்ந்து நிற்கும் மனிதர்கள் எல்லாம், தொடக்கத்தில் பட்ட கஸ்டங்கள், வேதனைகள், அவமானங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பாதவர்கள், அவர்களைப் புறக்கணிப்பவர்கள், அவர்களின் வெற்றியை மட்டுமே ரசித்து அவர்களின் இன்னல்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அல்லது தொடக்க கால இடர்பாடுகளைக் கொச்சைப் படுத்துபவர்கள் ஆகியோரை எல்லாம் நான் மதிப்பதில்லை... எனது மதிப்பீடு அனாவசியமாக இருக்கலாம். ஆனால் மதிப்பீடு வழங்க எனக்கு மதிப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.தேவை ஏற்பட்டால் அவ்வபோது தொடர்ந்து கருத்துரைப்பேன்.

ஆனால், பாலமுருகன், நீங்கள் என்னைச் சந்தேகப்படக் கூடாது. என்னை நீங்கள் தூரத்தில் இருந்துதான் கண்டிருக்கிறீர்கள்.நேர்மை அற்றவன் நான் என்றால் நான் நேர்மை அற்றவன்தான். எனது நேர்மை சொல்லித் தெரிய வேண்டியது அல்ல.

மிகுந்த வருத்தங்களுடன்
பா.அ.சிவம்

No comments:

Post a Comment