Wednesday, April 22, 2009

அஞ்சடி நண்பர்களே...

அஞ்சடி நண்பர்களே...

அஞ்சடி மின் இதழ் தொடங்கப்பட்டது முதல் இதுநாள் வரையில் நான் தனிப்பட்ட முறையில் யாரையும் இடித்துரைத்து எழுதியதில்லை. சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து எனது பார்வையை, கருத்தை முன் வைத்துள்ளேன்.

நவீனுக்கும் பாலமுருகனுக்கும் மகாத்மனுக்கும் இடையில் என்ன என்ன பிரச்சனைகள் என்னென்ன மனசிக்கல்கள் என அறிவதும் அவற்றைக் களைவதும் என்னுடைய பணி அல்ல. நவீனை தற்காத்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கும் அவருக்கும் இல்லை. நான் பாலமுருகனைக் குறிவைத்து சொற்களை இதற்கு முன்னர் பிரயோகிக்கவும் இல்லை. ஆனால் ஆகக் கடைசியாக வெளிவந்த அவரது எதிர்வினையைக் கண்டுதான் அதிர்ச்சியுற்றேன்.

நன்றாக கவனியுங்கள். அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை நான் விமர்சிக்கவில்லை அல்லது அதில் நான் சம்பந்தப்படவில்லை. ஆனால் பொதுவான அடிப்படையில், பாலமுருகன் சம்பந்தப்பட்ட இரு விவகாரங்களைத்தான் நான் விமர்சித்து கேள்விகள் எழுப்பினேன். என்னுடைய கட்டுரையை நன்கு படிக்கவும். புளித்துப்போன விவகாரத்தை மீண்டும் எழுப்பியதன் காரணத்தையும் அவசியத்தையும் கோரிதான் நான் எழுத முற்பட்டேன்.

பாலமுருகனைக் கேள்வி எழுப்பும் நான் ஏன் நவீனைக் கேள்வி எழுப்பவில்லை என்றால் இப்போது பழைய உளுத்துப்போன விவகாரத்தை யார் மீண்டும் அள்ளிக் கொண்டு வந்தது என நான் கேட்பேன். பதில் என்னவாக இருக்கும்? முதலில் அந்த பதிலைச் சொல்லுங்கள்...

பிச்சை என்ற சொல் பிரயோகம் பாராட்டிற்குரியதா ? ஓர் எழுத்தாளர் சொல்லி இன்னோர் எழுத்தாளரைச் சிறுமைப்படுத்தலாமா?இந்த இரு கேள்விகளைத்தான் நான் முன் வைத்தேன். இதற்கு முந்தைய எதிர்வினைகளையும் நன்கு கவனித்து வந்துள்ள நான், கடுமையாக விமர்சிக்க மேல் குறிப்பிட்ட அந்த இரு விவகாரங்களே அடிப்படை..ஆனால், அதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.. ஆனால் உங்கள் கருத்து அதுவாயின், நீங்கள் மாற வேண்டாம்.மாறத்தேவையில்லை...

பாலமுருகன், இனி உங்களின் கதைகளை வாசிக்கும் போது, உங்களின் இந்த எதிர்வினைகள் நினைவுக்கு வருமாயின், தொடர்ந்து வாசிப்பது சிக்கலாக இருக்கும். ஆனாலும், கதையாசிரியர் கே.பாலமுருகனுக்காக வாசிப்பேன்.அவ்வளவுதான்...

சீனி.நைனா முகம்மது முன்பு காரி உமிழ்ந்தது எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை எனக்கு. இந்த மோதல்கள்தான் ரணத்தை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் தொடர்ந்து மோதுவது என முடிவு செய்தாகி விட்ட போது, ரத்தமென்ன...உயிரென்ன?...நாங்கள் எல்லாம் நவீன உலகின் பிச்சைகள் தானே நண்பர்களே...

பா.அ.சிவம்

No comments:

Post a Comment