Monday, April 20, 2009

நாடகக் குரல்


வணக்கம் இந்தக் பத்தியை மிகவும் நிதானமாகவே எழுதுகிறேன்.இதை சிலர் தனி மனித தாக்குதல் என எடுத்துக்கொள்ளலாம்.பாதகமில்லை.

ஒரு இலக்கியவாதியை அவனது படைப்பை வைத்து மட்டுமே தீர்வு செய்வது பொருந்தாது.மாறாக அவனது சமூக வாழ்வு, அரசியல்,சமரசம் அற்ற தன்மை இவையெல்லாம் மிக முக்கியமான உபரிகள்.ஒரு எழுத்தாளனின் முதுகெலும்பு எப்போது வளைகின்றது என்பதை சமூகமும் காலமும் பார்த்துக்கொண்டே இருக்கிறது.இதன் மூலமே நாம் பாரதியை தராசில் ஏற்றியும் வைரமுத்துவை இறக்கியும் வைக்கிறோம்.இந்த சமரசம் இல்லாத தன்மையால் தான் இன்றளவும் சீ.முத்துசாமியில் உண்மை குரலுக்கு சிலர் 'பணம்' 'பதவி'யின் பின் ஒழிந்து கொண்டு தொடை நடுங்கி சாகின்றனர்.இந்த சமரசமின்மையால்தான் சிங்கை இளங்கோவனின் குரலுக்குள் உள்ள உண்மை தீயாய் அனைவரையும் சுடுகிறது.இந்த சமரசமின்மையால்தான் ஷோபாசக்தியின் பேச்சு சர்ச்சையை கிளப்புகிறது.ஆக எழுத்தாளனுக்கு சொற்குவியல் மட்டும் போதாது என நினைக்கிறேன்...

எல்லா விவாதங்களும் முடிந்தது என அடுத்தக்கட்ட வேலைக்கு நகர்கையில் மீண்டும் பாலமுருகன் உள் நுழைந்திருக்கிறார்.அவருக்கும் சேர்த்து அவரே அறிவுரைக்கூறிக்கொள்வது போல மீண்டும் தனது புலம்பலைத் தொடங்கியுள்ளார்.இது நான் எதிர்ப்பார்த்துதான்.மீண்டும் 'இங்கு யாரும் பரிபூரண ஆத்மா கிடையாது' என வேறு ஆய்வெல்லாம் செய்து அறிவித்துள்ளார்.தமிழ் படங்களில் வரும் வில்லனுக்குப் பக்கத்தில் இருக்கின்ற எடுபிடி தன் எஜமானனுக்கு கூழைக் கும்பிடு போடும் ரகமாக தனது இறுதி கடிதத்தில் மன்னிப்பெல்லாம் கேட்டு(http://anjady.blogspot.com/2009/03/blog-post_24.html)இப்போது மீண்டும் ஆலோசனைகளெல்லாம் வழங்கியுள்ளார்.அதில் 'எனக்கும் சேர்த்து' என தன்னடக்கம் வேறு.

சரி போகட்டும்.இதன் மூலம் எனக்கும் சில உண்மைகளைக்கூற வாய்ப்பு எழுந்துள்ளது.முதலில் நான் அநங்கத்திலிருந்து தம்பட்டம் அடித்துக்கொண்டு ஒரு நாடகம் போல் வெளியேறினேன் என்றிருக்கிறார்.நல்லது.'அநங்கத்தின் நிலைப்பாடும் போலி கண்ணீரும்'எனும் பத்தியில் அவர் ஆசிரியர் குழுவின் சில கோட்பாடுகள் என குறிப்பிட்டு சில தீர்மானங்களைக்கூறி இருந்தார்.அந்தத் தீர்மானங்களை எடுக்க அவருக்கு ஆலோசகர் தேவையில்லாத பட்சத்தில் அதை பகிரங்கமாக அறிவித்த பின் நான் விலகிச்செல்வது குறித்து அறிவித்தால் அது 'நாடகம்'.இதே எனது வார்த்தைக்காக 'என்னால் தொடங்கிய விவாதங்களுக்கு'எனும் பத்தியில் 'இறுதியாக நவீனுக்கு: அதுதான் மின்னஞ்சலிலேயே அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டீர்களே! பிறகு ஏன் இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்? பகீங்கரமாக எல்லோரும் அநங்கத்தைவிட்டு வெளியேறுவதை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டுமா? வலிக்கிறது நண்பா மனம். . . .' என வேறு அங்கலாய்ப்பு.நாடகம் ஆடுவது யார் பாலமுருகன்?

உங்கள் நாடகம் இன்னும் சில ஞாபகத்திற்கு வருகிறது பாலமுருகன்.

அநங்கத்தின் முதல் வெளியீட்டுக்கு எம்.ஏ.நுக்மானை அழைத்து வந்தவன் என்ற முறையில், உங்களின் முதல் நாடகத்தைப்பார்த்தேன்.நிகழ்வு பத்து மணிக்கு முடிந்தது .பன்னிரெண்டு மணிக்கு நீங்கள் ஜொகூருக்கு பேருந்து பிடித்து ஓடினீர்கள்.பழைய கதைதான் பாலமுருகன்...(எட்டப்பன் காட்டிக்கொடுத்தது போல ...சோரம் போன வை.கோ போல...கடைசி காலத்தில் சாமியின் காலை பிடித்த பண்டிதன் போல) இதுவும் பழைய கதைதான்.ஆனால் நீங்கள் யார் என்பதை காட்டிக்கொடுத்த கதை.அந்த நேரத்தில் தனது வேலைக்கு அவசரமாக விடுப்பு எடுத்து எனக்கு உதவிய யுவராஜனுக்கு இப்போதும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.பேராசிரியர் எம்.ஏ.நுக்மான் நம்மிடம் விருந்தோம்பலை எதிப்பார்க்கவில்லை.யாருக்கும் சிரமம் தராத மனிதர் அவர்.ஆயினும் மலேசியர்களின் விருந்தோம்பல் குணத்தை கொச்சை செய்து அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் சிரிப்பை வரவைக்கிறது.

நாடகம் இரண்டு: ஜனசக்தி இதழுக்கு மகாத்மன் நேர்காணல் செய்கையில் 'மாணிக்க வாசகம்' விருதை குறித்து உங்கள் மோசமான விமர்சனத்தை அனுப்பிவிட்டு(இன்னும் பத்திரமாக அவர் கைத் தொலைபேசியிதான் உள்ளது) அதை பிரசுரிக்க கேட்கையில் மலுப்பிய உங்கள் நாடகமான குறுந்தகவலும் கைத்தொலைப்பேசியில் உள்ளது.

சுங்கைப்பட்டாணியிலிருந்து ஒரு மின்னஞ்சல் அடிக்கடி அல்லது தினந்தோறும் சில எழுத்தாளர்களை 'என் கதையைப்பற்றி கருத்து சொல்லுங்க'என்றும் 'ஏதாவது பேசுங்க' என்றும் கெஞ்சிக் கொண்டிருக்கிறதாம் பாலமுருகன்.உங்களால் முடிந்தால் யாரென கண்டுபிடிங்க. அந்த எழுத்தாளர்கள் கெஞ்சல் பொறுக்க முடியாமல் ஏதாவது படித்துவிட்டு சொல்லும் சொற்ப வார்த்தைகளை அஞ்சடியிக்கு அனுப்பி வைத்து தொந்தரவு செய்கிறது அதே மின் அஞ்சல்.(இதில் அந்த மின்னஞ்சல் காரரின் எழுத்து வெகுசன எழுத்து என அந்த எழுத்தாளரே அவர் அகப்பக்கத்தில் பிரசுரித்ததை மட்டும் மறைத்து விட்டார் அந்த மின்னஞ்சல்காரர்)

மகாத்மனுக்கு எழுத்தாளர் சங்கத்தில் விருது கிடைத்தவுடன் அது தனக்கு வேண்டாம் என தூக்கி எறிந்தார்.நியாமில்லாத எழுத்தாளர் சங்கத்தின் போக்குக்கு எதிரான குரலாக அது இருந்தது.இதையே சுங்கைப்பட்டாணியிலும் ஓர் அம்மையார் செய்து அவரும் தனது எதிர்ப்பை வெளிபடுத்தினார்.ஆனால் நீங்கள்... அந்த விருது கிடைக்க உங்களுக்கு தகுதி இருப்பினும் உங்களுக்கு கிடைக்கவில்லை என வருத்தப்பட்டீர்களாமே பாலமுருகன்.(கவலையே வேண்டாம் அந்தக் குறுந்தகவலும் பத்திரமாக உள்ளது.)

எல்லாவற்றுக்கும் மேலாக அஞ்சடியில் கடுமையான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கும் மகாத்மனுக்கும் மாறி மாறி 'என் கதையை பிரசுரிப்பீர்கள?'என கேட்டிருந்தீர்களே பாலமுருகன்.அது எந்தவகை நாடகம்?

இன்னும் பேச சில விஷயங்கள் உண்டு...விரைவில்...

ம.நவீன்

No comments:

Post a Comment