Tuesday, April 21, 2009

கூழைக்கும்பிடு...

அஞ்சடி வாசகர்களுக்கு வணக்கம்.'நாடகக் குரல்'எனும் எனது எதிர்வினைக்கு பாலமுருகனும் தன் நிலையை புலம்பியிருந்தார்.அதை அஞ்சடி மின்னசலுக்கு அனுப்பாமல் எனது சொந்த மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.எனவே அதன் ஒவ்வொரு பத்திக்கும் சிறு விளக்கம்.அவ்வளவே...

எனது நாடகங்களை சிரமம் பாராமல் புலம்பலாக (நிதானமாக என்று அறிவிப்பு வேறு) அம்பலப்படுத்தியதற்கு மிக்க நன்றி நவீன். அது நாடகமா இல்லையா என்பதை பற்றி நான் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் நீங்கள் ஆடும் தொடர் மெகா சீரியல் நாடகத்தை மிகவும் கவனமாக கையாளுகிறீர்கள். அது என்று வெளிச்சத்திற்கு வரும் என்று காத்திருக்கவும் எனக்கு நேரமில்லை.

'நேரமில்லை...நேர விரையம்...ஒரு சிறுகதையாவது எழுதியிருக்கலாம் என' எப்போதும்தான் புலம்புகிறீர்கள்...ஆனால் மீண்டும் வந்து வெட்கமில்லாமல் ஒட்டிக்கொள்கிறீர்கள்.விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே 'நம் நட்பு இதனால் பாதிக்கப் படாதே...இதனால் நான் உங்களுக்கு கதை அனுப்புவது தடைப்படாது'என்ற அங்கலாய்ப்பு வேறு.தலைநகரில் சில நண்பர்களிடம் வேறு புலம்பி தள்ளுகிறீர்களாம்.ஒரு நண்பர் 'பாவம்பா அவன் ..புலம்பி தள்ளுரான்...காதில் ரத்தம் வருது'என வேறு கிண்டல் செய்ய தொடங்கிவிட்டார்.அப்புறம் நீங்களே அதற்கெல்லாம் நேரம் இல்லை என்பீர்கள்.விவாதம் வீண் என்பீர்கள்.

12 மணி இல்லை நவீன். சுங்கைப்பட்டாணியிலிருந்து ஜொகூருக்கு 10.30 மணியே கடைசி பேருந்து. என்ன நவீன் நீங்கள்? எதையும் சரியாகக் கவனிக்காமல்தான் பேசுவீர்களோ? ஓடவில்லை நவீன், நல்லா சொகுசாக பேருந்து சீட்டில் அமர்ந்து கொண்டுதான் சென்றேன். பழைய கதை என்று நீங்களே குறிப்பிட்ட பின் அதை மீண்டும் பேச எனக்கு விருப்பமில்லை.

இல்லை பாலமுருகன் நீங்கள் ஓடிதான் சென்றீர்கள்.இன்னும் சொல்வதானால் நடுரோட்டில் விட்டு விட்டு.நான் பார்த்தது ' நேரமாகிவிட்டது' என நீங்கள் ஓடிச்சென்றதைதான். அதன் பின்னர் நீங்கள் நிகழ்வில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு எங்கு போனீர்கள் ...எப்படி போனீர்கள்...அல்லது போகாமல் வீட்டில் தூங்கினீர்களா என்பன போன்ற விபரங்கள் தெரியவில்லை.நான் பார்த்தவரை 'அநங்கம்' அறிமுகத்துக்காக வந்த எம்.ஏ.நுக்மானை உபரசிக்காமல் ஓடிய பாலமுருகனைத்தான்.

நீங்கள்தானே வல்லினம் ஆசிரியர்? உங்களிடம்தான் படைப்பு குறித்தும் பிரசுரிப்பது குறித்தும் கேட்க வேண்டும் பேச வேண்டும். ஒருவகை ஆணவம்தான் உங்களுக்கு. இதற்கு முன் வல்லினத்திற்க்காக வங்கியில் பணம் சேர்ப்பிக்க 3-4 முறை மின்னஞ்சல் வந்துவிடும். அது எந்தவகைக் கெஞ்சல்? இதழை நடத்த நீங்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு அனுப்பும் மின்னஞ்சலை, "பிச்சை' எனச் சொல்லலாமா? உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால். தரமான இதழ் வல்லினம்,ஆதலால் அதில் நம் படைப்பு பிரசுரம் ஆகுவது குறித்து நினைவூட்டல் வகையில் கேட்டால், அது என்ன நாடகமா? நாடகம் என்றால் என்ன என்பதில் உங்களுக்குப் பிசகல்.

உண்மைதான் பிச்சைதான் வாங்குகிறேன்.சரியாக 4 முறை குறுந்தகவல் அனுப்பி பிச்சை வாங்குகிறேன் 'வல்லினம்' நடத்த.இந்த பிச்சை மூலம்தான் இன்றளவும் பல தமிழக சிற்றிதழ்கள் நிலைக்கின்றன என பெரியவர் சோதிநாதன் போதனையில் ...மா.சண்முகசிவா ஆலோசனையில் பிச்சை வாங்குகிறேன்.மொத்தம் 23 பேர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 50 மற்றும் 100 என பிச்சை போடுகின்றனர்.அச்சடிப்பு செலவு 3000.00 ரிங்கிட் வருவதால் எனக்கு நானே சில நூறு ரிங்கிட்டை பிச்சையிட்டு அச்சுக்கு செலுத்துகிறேன்.அச்சுக்கு வந்த புத்தகத்தில் 100 வழங்குபவருக்கு 26 புத்தகங்கள் அனுப்பி வைக்கிறேன்.அவர்கள் எனக்கு கொடுத்த 100 ரிங்கிட்டுக்கு என்னால் முடிந்த சிறு நன்றி.இந்த 23 பேர் கொடுத்த பிச்சையால் இன்று மலேசிய இலக்கியத்தை சுமந்த 'வல்லினம்' 5 நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.சமயத்தில் சிலர் அன்பு மிகுதியால் அதிகம் பிச்சை இட்டுவிடுவது உண்டு.அந்த பிச்சைப்பணத்தை சேமித்து இலக்கிய நிகழ்வுகள் நடத்துகிறேன்.நான்தான் 'வல்லினம்' ஆசிரியர் என்னிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது 'என்னுடைய கதைய போடுவீர்கள்தானே' என்று நிச்சயம் கேட்கலாம்தான்!!!ஆனால் அரசியல் பத்திரிக்கையாளரான மகாத்மனிடமும் அதே கெஞ்சல்...'நான் உங்கள் பத்திரிக்கைகு கதை அனுப்பலாமா?'என.ஒரு வேளை அதையும் இலக்கிய இதழ் என எண்ணி விட்டீர்களோ! மின்னஞ்சலில் வக்கனையாக பேசிவிட்டு அடுத்த நிமிடமே நீஙகள் குறுந்தகவலில் போடும் கூழைக்கும்பிடு நடிப்பில்லைதான்.

உங்களின் ரெட்டத்தன நாடகமும் அஞ்சடி வாசகர்கள் அறிந்ததுதான். பா.ம விஷயத்தில் மூக்கை நுழைத்து நாட்டாமையெல்லாம் பண்ணிவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்டதை என்ன "செல்வி' நாடகத்திற்கு இணையான "செல்வன்' நாடகன் என்று சொல்லலாமோ? பா.மவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு அஞ்சடியில் கூழை கும்பிடுவை நன்றாகவே போட்டுள்ளீர்கள்.

திரு.பாலு மணிமாறன் என்னைத் தொடர்பு கொண்டார்.தனது தரப்பு நியாயங்களைக்கூறினார்.எனவே ''இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து ஒரு கவிஞரை அழைத்து வந்து இந்த நண்பர் படுத்தியபாடும் அடித்தக் கொள்ளையும் நினைவிற்கு வருகிறது' என கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அதில் 'அடித்தக் கொள்ளை'என்ற சொல்லை பிரயோகித்தமைக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அந்தச்சம்பவத்தை நான் நேரில் இருந்து பார்க்காத நிலையில் சம்பந்தப்பட்ட சிலரின் வாய் வழி வாக்கு மூலத்தால் ஏற்பட்ட கோபம் அது. எப்படி இருப்பினும் 'அடித்தக்கொள்ளை' என்பது மிகவும் கனமான சொல்லே. எந்த ஆதாரங்களும் இல்லாத காற்றில் கடந்த சொல்.'என்றேன்.இவ்வளவுதான் இவ்வளவேதான்.இது கூழைக்கும்பிடா...

சரி இனி உங்கள் வரிகளில் சில...

*எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

*நான் முன்பே சொன்னது போல எனக்கு விவாதிக்கும் திறனே இதுதான் முதல் அனுபவம் என்பதால் நான் முன்வைத்து நானே சிக்கிக் கொண்ட சில பதற்றங்களை, தடுமாற்றங்களை எண்ணி வருத்தம் கொள்கிறேன்என்னை முன்னிறுத்தி நான் ஆடிய அபத்த விவாதங்களில் கொஞ்சம்கூட நியாயம் இருக்குமோ இல்லையோ, தாராளமாக மன்னிப்பு மட்டும் கேட்கத் தோன்றுகிறது.

*நண்பர்களே, மீண்டும் நான் எல்லோரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என்னால் தொடங்கிய விவாதம்தான் இந்த அளவிற்குக் காத்திரம் பெற்று எங்கொங்கோ சென்று இழிவான நிலைக்குச் சென்றுள்ளது.
நவீன் நீங்கள் அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகியது தங்களின் சுதந்திரம். இனி அநங்கத்தின் ஆலோசகர் குழு இல்லை. அநங்கத்தை இன்னும் வளர்க்க பாடுபடுவேன். மேலும் விலகினாலும் நீங்கள் கடைசியாக சொன்ன ஆலோசனைகள் படி அநங்கத்தை இன்னும் தீவிரமாக்க முயற்சிப்பேன்.

*யுவராஜன் சொன்னதை அப்பொழுதே கேட்டிருக்கலாம் போல. மன்னிப்புக் கேட்டுத் திருத்திக் கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்க வேண்டியிருக்காது.
*நுண் அரசியலோ மண்ணாங்கட்டி அரசியலோ, இன்றும் இந்த அரசியல் வைத்தே நான் சிலரால் மதிபீடப்படுகிறேன்.
*இனி அவர்களிடம் நேர்மையா தவறை ஒப்புக் கொண்டு சென்றாலும் நான் சந்தர்ப்பவாதி எனக் கருதபடுவேனா? வேண்டாமப்பா!
*விபச்சாரி யோனி குறித்து நான் சிறுகதை எழுதுகிறேனோ நாவல் எழுதுகிறேனோ அது என் பாடு. நானே வலிந்து ஏற்படுத்திய கட்டமைப்பைக் கொஞ்சம் தளர்த்தும்போது மனம் இலேசாகுகிறது.
*அநங்கத்தின் எழுத்துப் பிழைகளைக் குறைக்க களைய ஆசிரியர் குழுவில் சொல்லி சீரமைப்பேன்.. . சிவம், நவீன் முன்வைத்த நட்பான எதிர்வினையில் மனம் இலேசாகி எல்லாம் தவறுகளையும் என் மீதே சுமத்திக் கொண்டு நிற்கலாம் எனத் தோன்றுகிறது. அன்புக்கு இவ்வளவு சக்தியா? -

இதன் பெயர் என்ன? அட போங்கப்பா...

மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா குறித்து எல்லோரையும் எங்களுடன் சேர்ந்து கொண்டு குரலெழுப்புங்கள் என்று ஏன் வற்புறுத்த வேண்டும்? நீங்களே முதுகெலும்பை வளைக்கும் கழகத்தைத் தொடங்கிவிடுவீர்கள் போல?

நான் யாரையும் வர்புறுத்தவில்லை பாலமுருகன்.எங்களுக்குத்தெரியாதா உங்களின் முதுகெலும்பின் வலுபற்றி.எதிர்ப்பதை நான் முன்னிருத்தவில்லை.அதிகாரத்துக்கு எதிராக உண்மையை கூற சொல்கிறேன்.அவ்வளவே.உங்கள் ஆளுமை என்னவென்று இப்போது தெரிந்த பின்னர் கவலைவேண்டாம் குறுந்தகவலில் மட்டுமே குசு குசு வென வரும் உங்கள் குரலை எதிர்ப்பார்க்க மாட்டோம்.

முதலிலிருந்து ஒரு பாலர் பள்ளி மாணவனுக்கு சொல்வது போல சொல்ல வேண்டும் போல உங்களுக்கு. போலி கண்ணிரும் அநங்கமும் என்கிர கட்டுரையின் மூலம் நான் அநங்கத்தின் நிலைபாடுகளைச் சொன்னதற்குக் காரணமே உங்களின் முதல் கட்டுரையும் அதன் பிறகு வந்த நக்கல் கட்டுரையும்தான். ஆலோசனை வழங்க உங்களுக்குத் தெரியவில் லை. எப்படி ஒரு இதழ் குழுவை அணுக வேண்டும் தெரியாமல் புத்திமதி சொல்லும் அளவிற்கு வளர்த்துவிட்டதாக மமதை வேறு. ஆமாம் நீங்கள் இதழியல் துறையின் மிகப் பெரிய தூண். நீங்கள் விலகுவதால் மனம் வலிக்கத்தான் செய்கிறது. அட போங்கப்பா!


என் நினைவில் உங்களிடம் நான் ஆலோசகராய் என்னை புகுத்த சொல்லவில்லை.நீங்களாகப் போட்டீர்கள்.அதில் எனக்கு என்ன மமதை.'கெ.டி.என்' இல்லாமல் வரும் இதழால் என்ன சட்ட சிக்கல் வரும் என்று... குழைந்து குழைந்து கேட்கும்போது உங்களுக்கு என் ஆலோசனை தேவைப்பட்டது...ஒரு தமிழக இதழின் முகவரியை போட்டு அச்சிட்டபோது உங்களுக்கு என் ஆலோசனை தேவைப்பட்டது...முதல் இதழின் பக்கங்களை அனுப்பிவத்து இது சரியா அது சரியா என கேட்ட போது உங்களுக்கு என் ஆலோசனை தேவைப்பட்டது...அப்போது உங்களுக்கு என் மமதை தெரியவில்லையா பாலமுருகன்.உங்களுக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரியும் போல...ஒரு பாலர் பள்ளி மாணவன் போலவே நடந்து கொள்கிறீர்கள்.

மறந்துவிட்டீர்கள் போல நவீன். நயனத்தில் உங்கள் கவிதைகளைப் பிரசுரிக்க சொல்லி ஒரு எழுத்தாளரிடம் கெஞ்சினீர்களாமே. . பழைய கதைதான். சிபாரிசு தேடி பல எழுத்தாளர்களைப் போய் சந்தித்து உங்கள் படைப்புக்கு அங்கீகாரம் வேண்டி அலைந்தீர்களாமே. அதை மறந்துவிட்டீர்கள் போல. இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய சூழல்.

எதையும் நான் மறக்கவில்லை.என் படைப்புகளை பிரசுரிக்க நான் அலைந்த அலைச்சல் குறித்து ஒரு பத்தியே தனியாக எழுதி வைத்துள்ளேன்.ஏறக்குறைய 16- 18 வயதுக்குள்ளான காலம் அது.அது குறித்து 'என் உயிரெழுத்து'என ஏற்கனவே பத்தி வேறு எழுதியுள்ளேன்.அந்தக்கவிதைகள் இன்னும் பத்திரமாக இருக்கின்றன.வாழ்வில் பிரிக்க இயலாத பகுதி அது.ஒரு வேளை அந்த பருவம் இல்லையென்றால் இலக்கியம் தொடர்பான எனது சிறிய பயணம் சுவாரசியம் இன்றி இருக்கும்.நீங்கள் சொன்ன அந்த எழுத்தாளர் கோ.புண்ணியவான்.அவரிடம் இலக்கியம் குறித்து பேச வேண்டும் என்றே அவரின் விக்டோரியா பள்ளியில் சம்பளம் இல்லாமல் பணிபுரிந்தேன்.இளஞ்செல்வனின் மரணத்துக்குப் பின்னர் நானே தேடிச்சென்று அவரிடம் கவிதை குறித்தும் கதை குறித்து நிறையவே கற்றுக்கொண்டுள்ளேன்.அதை இதுவரையில் என்றுமே மறந்ததோ மறுத்ததோ இல்லை.அவரிடம்தான் என் கவிதைகள் நயனத்தில் பிரசுரம் ஆகுமா என கேட்டு சில கவிதைகள் கொடுத்தேன்.அவரும் உதவினார்.நீங்கள் கூறுவது போல கெஞ்சினேனா என அவர்தான் சொல்ல வேண்டும்.சொல்வாரா?
அப்புறம் அங்கீகாரம்?! எனக்குத் தெரிந்து அப்போது நான் எழுதியதே 5 கவிதைகள்.அதுவும் மக்கள் ஓசையில் வந்தது.அதை வைத்துக்கொண்டு எந்த அங்கீகாரத்தை யாரிடம் கேட்டேன் என தெளிவாக கூறலாமே பாலமுருகன்.ரொம்ப வருடம் ஆகிவிட்டதால் மறந்து விட்டது.ஆனால் ஒன்று உண்மை உங்களைபோல தமிழ் நாட்டு எழுத்தாளர்களிடம் படைப்பை அனுப்பி கறுத்து சொல்லுங்க சார் என்றும் அவர் படைப்புகளுக்கு 'காக்கா பிடித்தும்' என் கதையை படிங்க என இதுவரை நான் நிச்சயமாய் கெஞ்சவில்லை.

இறுதியாய்...
'நவீன் குறித்து நீங்களே அவர் பால் உள்ள கடுப்புகளை என்னிடம் சொல்லியிருக்க்கிறீகள்.' என எனக்கும் மகாத்மனுக்கும் சிண்டுமுடிக்க முயன்றது போல யுவராஜனனின் மேல் நான் கொண்ட கடுப்பையும் எடுத்து கூறி சிண்டு முடிக்க முயன்றுள்ளீர்கள்.இதவிட கடுமையாகவெல்லாம் நானும் யுவாவும் சண்டையிட்டு முடிந்து விட்டது பாலமுருகன்.நீங்கள் கூறிய சிபாரிசு தேடி அலைந்த காலத்தில் எனது மிகப்பெரிய எதிரி இந்த யுவராஜந்தான்.பின்னாளில் எனது இலக்கியம் தொடர்பான சிந்தனை மாற்றத்துக்கும் அவர்தான் முதல் காரணம்.நான் அவரை கிண்டல் செய்வது அவர் என்னை வாரிவிடுவதும் வழக்கமாக நடக்கும் சம்பவங்கள்.இதில் என்ன வேஷம்.உங்கள் ஊர் காரர்தானே.உடனே நேரில் போய் சொல்லுங்கள்.நீங்கள் சிண்டு முடிக்க இது களம் இல்லை.

ம.நவீன்

No comments:

Post a Comment