Friday, April 3, 2009

கெடுத்துக்கொள்ள வேண்டாம்...


எழுத்து மூலமாக எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் நீங்கள். வல்லினம் மூலம்தான் சீ.முத்துசாமி, மஹாத்மன். பா.அ.சிவம். கே.பாலமுருகன், சண்முக சிவா, மற்றும் பலரை நேரடி கதைப்பின்றி அறிந்துவைத்திருக்கின்றோம். ~அஞ்சடியை இன்றைய மலேசிய எழுத்தாளர்கள் அணுகிய விதம் பற்றிய எங்களது பார்வையை முன்வைப்பதில் எவருக்கும் சங்கடம் நேராது என நம்புகின்றோம். எல்லோரும் வேடிக்கைப் பார்த்து, நகைத்து. கேலிக்கு இடம் தருவதிலிருந்து விலகியிருத்தலும் அஞ்சடி சண்டைக்காரர்களாக நீங்கள் போய்விடக் கூடாது என்பதும் தான் எமது அதி முக்கிய நோக்கங்களில் ஒன்று.

-விவாதங்களுக்குரிய ஒரிஜினல் கட்டுரை எமது பார்வையில் (அஞ்சடியில்) கிடைக்கக் காணோம். ஆகவே, அந்த விவாதங்களுக்குள் நுழைய எமக்குத் தகுதியில்லை.

-கே.பாலமுருகன் தன் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டபடியினால் அதைக்குறித்து மேலும் கதைப்பது அநாகரீகம். (மஹாத்மன் அறிக)

-எல்லோரும் ஒருவரை ஒருவர் தாக்கி, பரிகசித்து, கிண்டலடித்துள்ளீர்கள். (ம.நவீன்-சிவம் இதில் மிகவும் குறைவான பங்கு வகித்திருக்கிறீர்கள்;, அலட்டிக்கொள்ளாத எழுத்துநடை).

-மஹாத்மனும் கூட தனிமனித தூற்றுதல் வேண்டாம், வேண்டாம் என்று எழுதிக்கொண்டே கொஞ்சம் குறைவாக, மறைமுகமாக, பதுங்கித் தாக்கும் பாணியை கையாண்டிருப்பது வெட்டவெளிச்சம். (இதன் மூலம் கடந்த-நிகழ்கால சில உண்மைகளின் நிழலாட்டங்களை காணக் கிடைக்கின்றன).

-சீ.முத்துசாமி விவாதங்களுக்குள் வராமல் கிண்டலுடனும் கேலியுடனும் கதைத்து சென்றிருப்பது ஆச்சரியம் தருகிறது. (ஆச்சரியம்-அவருடைய வல்லினத்தின் படைப்பு)

-கோமளா + குமார் உண்மையாக வௌ;வேறு நபர்கள் என்று அவர்களாகவே முன்வந்து தோன்றினால் மட்டுமே சாத்தியப்படும். இணையத்தின் மூலம் நாங்கள் வௌ;வேறானவர்பள் என்று சொல்லிக்கொள்வதில் மட்டும் நிரூபணமாகாது. கே.பாலமுருகன் அவர்களே மறுத்தாலும் கூட ~நான் அவன் - அவள் இல்லை என்று நிரூபிப்பது சாத்தியமன்று.

-இதுவரை யாருமே நுண் அரசியல் - எதிர் அரசியல் - நுண் முரண்பாட்டு அரசியல் என்ற விடயங்களை தொட்டு கதைத்தது கிடையாது.

- வளரும் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் வலுவாக பதிக்கும் முயற்சிகளில் எமக்கு நம்பிக்கை உண்டு. உங்கள் மத்தியில் இருக்கும் ரெ.கார்த்திகேசு அவர்களையும் அவர் விஞ்சக்கூடும். எழுத்து காலத்தால் பேசப்படும். ஆகவே அந்தக் கவலை யாருக்கும் வேண்டாம.

- கோமளா - குமார் - அந்தோணி - தமிழன்பர் ஆகியோரின் எழுத்து நடுநிலை கொண்டிருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
-இனி எச்சில் தெறிப்பு சொற்கள் வேண்டாம்.

-எழுத்து விபச்சாரத்திற்கு அது கொண்டுபோய் விடும்.

-சீ.முத்துசாமி + மஹாத்மன் அவர்களுக்கு.வல்லினத்தின் படைப்புகள் மூலம் உங்களுக்கு இருக்கின்ற நற்பெயரை இந்த மாதிரி சிறுபிள்ளைத் தனமான சர்ச்சைகளில் ஈடுபட்டு கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஜெயமோகன் அவர்கள் எம்.ஜி.ஆரின் ஊனத்தை பரிகசித்தும் சாருநிவேதிதாவிடம் தர்க்கித்தும் தன் இமேஜை குறைத்துக் கொண்டது போல நீங்களும் குறைத்துகொள்ளும் போக்கில் வலிந்து போவானேன்?!

நன்றி. வணக்கம்.
வசந்தரூபன்
டொரண்டோ.

No comments:

Post a Comment