Friday, April 3, 2009

நாமெல்லாம் எங்கிருந்து முளைத்தோம்? மஹா-வின் சிறுமைத்தனம்

நண்பர் மஹாத்மன் அவர்கள் ஒருவேளை மனமுடைந்து போயிருக்கலாம். பலமுனை தாக்குதலால் உங்களுக்கு அளிக்கப்படும் கவனத்தைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சித்தான் படவேண்டும். அதற்காக நாங்கள் எழுதும் எழுத்துக்குப் பிறரைக் குற்றம்சாட்டுவது செம்ம காமெடி மச்சி!

நான் குமார்தான். பாடாங் செராய் வந்தால் என்னைத் தாராளமாகச் சந்திக்கலாம். நீங்கள் என்ன அரசியல்வாதியா நஸ்டஈடு கேட்டு என்னை வற்புறுத்த? நான் பயப்படப் போவதில்லை. வாருங்கள் பாடாங் செராயில் நல்ல காப்பி கடைகள் உள்ளன. உட்கார்ந்து பேசலாம்.

பதற்றமெல்லாம் ஒன்றுமில்லை. வேகமாக டைப் செய்யும் பழக்கம் என்பதால், ஆங்காங்கே எழுத்துப் பிழைகள். இந்த யூனிகோட் அடிக்க கொஞ்சம் சிரமமாக உள்ளது.

கோமளாக்கு: நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நாம் இருவரும் ஒன்றென்று தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் சொல்லியிருப்பதால், இங்கு இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு அனுப்பும் கருத்தும், நான் என் வீட்டில் இருந்து கொண்டு அனுப்பும் கருத்தும் எப்படி தலைநகர் மஹாத்மனின் நண்பர்களால் ஒன்றென்று கண்டுபிடிக்கப்பட்டது? கோமளா நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பர் மஹா அவர்கள் உலகைக் கண்காணிக்கும் காமிரா ஒன்றை பொருத்தி "உலகைச் சுற்றி" கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை நாம் விவாதிக்கும் திறனைக் கண்டு இவர்களெல்லாம் எங்கேந்து முளைத்து வந்தார்கள், என்று மஹா சந்தேகப்பட்டிருப்பார். அவருக்கு விடை கிடைக்காத பட்சத்தில் யார் மீது குற்றம் சுமத்துவது என்று தெரியவில்லை. இருக்கவே இருக்கிறாரே தமது சர்ச்சைக்குற்பட்ட வரியால் உள்ளே வந்து மன்னிப்புக் கேட்டு விலகிய நண்பர் கே.பா. மீண்டும் வம்புகிளுத்து தனது அனுமானத்தால் மீண்டும் அவரை மன்னிப்புக் கேட்க வைக்க இதை ஒரு ஹாபியாக செய்து கொண்டிருக்கிறார் போல.

நாமெல்லாம் எங்கிருந்து முளைத்தோம்?

ஒருவேளை நாமெல்லாம் எதையும் வாசிக்காதவர்கள் என முடிவு கட்டிவிட்டார் போல. நாமும் மலேசிய வல்லினம் தொடங்கி இந்தியா உயிர்மை வரையிலும், ஜெயமோகன் தொடங்கி சொ.தர்மன் வரை வாசிக்கிறோம் என்று "தான் மட்டுமே ஜாம்பவன் என்று எண்ணிக் கொண்டிருக்கும்" அவர் மண்டையில் ஒலிக்கவில்லை போல.பா.மா என்று யாரைப் பற்றியோ வம்புகிளுத்து பேசிய இவர், அதைத் தொடங்கிய நவீனே மன்னிப்புக் கேட்டும், அந்த பா.மா வை உள்ளே இளுத்த மஹா அவர்கள் இன்னும் மன்னிப்புக் கேட்காததிலேயே, உங்களுக்கெல்லாம் தெரியவில்லையா? "மன்னிப்பு கேட்பது மகத்தான விஷயம் என்று சொல்லிவிட்டு , நன்றாக போய்க் கொண்டிருந்த விவாதத்தை தனிமனித அவதூறுகள் பக்கம் திருப்பிவிட்ட மஹா அவர்கள் எவ்வளவு பெரிய சிறுமையான மனிதர் என்று.

பல சாபங்களைச் சுமந்து திரியும் பரதேசியான (அவரே சொன்னது) மஹா அவர்களின் பேச்சில் எப்படி உண்மை இருக்கும்?

குறிப்பு: நண்பர்கள் சொன்னார்கள் என மஹா குறிப்பிடுவது அவரின் சுய அனுமானத்தின் மொத்த ரூபங்கள்தான் போல.

(பாடாங் செராய் நண்பர்களுக்கு, நீங்களும் அஞ்சடியில் பதிவிடுங்கள், பிறகு உங்களையும் என்னையும் ஒன்றென்று சொல்லி சப்புக் கொட்டுவர் ஒருவர் பல்லி மாதிரி)

குமார்
பாடாங் செராய்

No comments:

Post a Comment