Friday, April 3, 2009

இருக்கலாம் யார் கண்டது?!

அஞ்சடி, வணக்கம்.

திண்ணை தெரியும். அஞ்சடிக்கும் வந்துவிட்டீர்களா?

ஆண்கள் கதைப்பதற்கும் சண்டை போடுவதற்கும் தூற்றி காரி உமிழ்வதற்கும் ஏற்ற இடம்தான் இது. இப்போது தான் உங்கள் நாட்டில் ஆரம்பமாகி இருக்கிறதா?

கொஞ்சம் பகடி, நிறைய தூஷணங்கள், கொஞ்சத்திலும் கொஞ்சம் இடம்பெறுகிறது இலக்கிய விவாதம்!அநங்கம், மவுனம் என்ற ஒரு இலக்கிய இதழா? தமிழ் இலக்கியம் மலேசியாவில் ஒளிர்கிறதோ...

உங்களுக்குள் சண்டை. நாங்கள் வேடிக்கைப் பார்க்கிறோம். எங்கள் நாட்டை உலகம் வேடிக்கைப் பார்ப்பதை போல.இதில் கோமளா - குமார் இருவரும் ஒரே நபர் எனற சந்தேகம் வேறு..... தமிழன்பரும் அந்தோனியும் கூட ஏன் ஒரே நபராக இருக்கக் கூடாது என்ற கேள்வியும் கேட்பீர்கள்...

மன்னிப்பு கேட்ட பிறகு கே.பாலமுருகன் இந்த பெயர்களில் எழுதுகிறார்களோ.....கோமளாவைக் குறித்து குமார் கதைக்கும் வார்த்தைகளில் சந்தேகத்திற்கு இடம்கொடுக்கிறது.இருக்கலாம் யார் கண்டது?!

மஹாத்மன், உங்கள் 'கடவுள் கொல்ல பார்த்தார்' எப்போது வெளிவருகிறது?ம.நவீன், ஏதேனும் புத்தக வெளியீடு உங்களிடமிருந்து...?பா.அ.சிவமிடம் இருந்து.....

வனிதா கார்லோஸ்,
பாரீஸ்.

No comments:

Post a Comment