Saturday, April 4, 2009

100 தலை பிரம்மாவின் தலைமறைவு வாழ்க்கை

பாடாங்செராய் குமார் வடமொழி செவ்வியல் புராணங்கள் வேதங்கள் அனைத்தையும் கறைத்துக் குடித்து செரிமானம் ஆகாமல் அலைந்து திரிவது புரிகிறது. நம்மால் கடலின் ஆழத்தை ஒத்த அதன் சாரத்தை உள்வாங்கவோ ஜீரணிக்கவோ இயலாது. ஆனாலும், அதனை உண்டு ஜீரணித்தவர் சொல்லும்போது, அது ஆதாரபூர்வமான செய்தியாக இருக்கும்பட்சத்தில், அதனை ஏற்பதே அறிவுடைமை.

அது சரி குமார். அறிவுபூர்வமான ஒரு வார்த்தை வைத்துவிட்டு, அடுத்த பத்தியிலேயே அந்த அறிவு நிலைக்கு சம்பந்தமில்லாத வகையில் எதற்கு உளறி வைத்துள்ளீர்கள்?

உமது குருநாதரைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லையே? அப்புறம் எதற்கிந்த வரிந்துகட்டல்? ஒருவேளை உங்கள் அனைவருக்குமே அவர் ஒருவர்தான் குருநாதரா? ஆமாம் என்றால் உங்கள் அனைவருக்குமான எனது பதில் இதுதான்.... மஹாத்மன், ஒரு மாமாங்கத்திற்கு முன்பு, அவரது பெயரை பட்டவர்த்தனமாக அஞ்சடியில் போட்டுடைத்து வைத்த கடுமையான விமர்சனத்திற்கு, தனது சுய முகத்தைக் காட்டி, இதுநாள்வரை அவரிடமிருந்து எதிர்வினை ஏதுமில்லையே ஏன் குமார்? பயமா?

எல்லா தருணங்களிலும் எனது சுய அடையாளத்தோடு, யுத்தக்களத்தில் நிற்பவன் நான். என்னைப் பார்த்து பயமா என்கிறீர்கள்? அது உங்கள் குருநாதரைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியல்லவா? ஜோக் பண்ணாதீர்கள் குமார்? (குமார் என்பது உங்கள் சொந்த அடையாளம்தானே? அல்லது இதுவும் குருநாதர் காட்டிய வடூயா? அப்புறம், அதென்ன குமார் முடிக்கும்போது பி.எஸ்.வீரப்பா பாணியில் ஆ...ஆ...ஆ.. என்று ஒரு சவடால் சிரிப்பு. எடுபிடிகள், ஹி...ஹி...ஹி... என்றுதானே சிரிக்க வேண்டும். அதுதானே நடைமுறை. அதுதானே, அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சிரிப்பு வகை.

சாரங்கன் எனும் ஒரு பினாமிக்கு...என்ன சாரங்கன் அண்ணே? உங்களுக்கும் ஒரு ஈ மெயிலா. அதுவும் என்னைப்பற்றி? புரியவில்லையே? அந்த ஈ மெயிலில் பாதி பைத்திய நிலையில் தலையை விரித்துப்போட்டு என்பதாக என்னைப் பற்றி தாங்கள் வைத்துள்ள ஒரு குறிப்பு என்னை ரொம்பவும் கவர்ந்தது அண்ணாச்சி. காரணத்தோடுதான். மற்றவை அனைத்துமே. யாரோ ஒரு பாலகன் நான்கு நாட்கள் வெளிக்கு போகாமல் மூலச் சூட்டில் கக்கூசில் உட்கார்ந்து தம்கட்டி முக்கி முக்கி அவதிப்படுவது போன்ற வெற்று முணகல்களாக இருப்பதால், அதில் தாங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்பதே, என்ன கரணம் போட்டு பார்த்தும் பிடிபடவில்லை. வயதான அண்ணாச்சி தாங்கள்... கொஞ்சம் புரியும்படி இனி மேலாவது எழுதக் கற்றுக் கொள்ளுங்களேன்.

சரி அண்ணாச்சி. இந்த பைத்திய நிலைக்கு வருவோம். தாங்கள் இப்படி பேசுவது கொஞ்சங்கூட நியாயமில்லை அண்ணாச்சி. இரண்டு மாதத்திற்கு முன்புதானே உங்ளை சுங்கைசிப்புட் டிராபிக் ஜங்சரின் பார்த்தேன். ங்கே...ங்கே.... என்று ஒரு தகரக் குவளையை தட்டிக் கொண்டு நடுரோட்டில் நின்ற வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தீர்களே?
இப்போது சொஸ்தமாகிவிட்டதா அண்ணாச்சி? இருக்கட்டும், இருக்கட்டும். நல்லாருங்க. ஆனா, இப்ப அதெல்லாம் மறந்திட்டு, இப்படி உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தன பாத்து, ஑பாதி பைத்தியம்ஒ னு சொல்றது என்ன நியாயம் அண்ணாச்சி.

அப்புறம் இன்னொரு விஷயம் அண்ணாச்சி. அண்ணக்கி உங்கள சுங்கை சிப்புட் நடுரோட்ல பாத்த அதே 'கெட்டப்ல' இங்க எங்க ஊர் சுங்கைப்ப்டாணி சுப்ரமணியர் கோயில் ஜங்சன்ல, ஒரு எளவட்டம் கொஞ்சநாளா ங்கே...ங்கே..னு தரத்த தட்டிகிட்டு திரியுது. உங்களுக்கும் அதுக்கும் ஏதோ ஒறவா அண்ணாச்சி? இருந்தா சொல்லுங்க, ஒங்களுக்காக, அந்த இளந்தாரிக்கு புடிச்சிருக்கிற மனநோய சொஸ்தபடுத்தி உங்க ஊருக்கே அனுப்பி வச்சிடறேன். இதுக்காக நீங்க ஏதும் கைமாறு செய்ய வேணாம்.

அண்ணாச்சி, நீங்க மறுபடியும் டிராபிக் லைட்ல நின்னு ங்கே...ங்கேனு தகரத்த தட்டி ஊரக் கூட்டி வேடிக்க காட்டாம இருந்தா அது போதும். வணக்கம். வரட்டுமா அண்ணாச்சி.

கோமளா மற்றும் பிறருக்கும்.போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவது மாலை சால்வைகள் பெறுவது போன்றவற்றிற்கு ஒரு எதிர்ப்பாளன் போல சிலபேர் என்னை உருவகிக்கும் ஒரு முயற்சியின் நீட்சியாகவே உங்களுடைய கருத்தும் இருக்கிறது. 24 வயதிலேயே தமிழக குமுதம் இதழ் நடத்திய உலகளவிலான சிறுகதைப் போட்டியில் தென்கிழக்காசிய பகுதிக்கான போட்டியில் முதற்பரிசும், அதனைத் தொடர்ந்து, அதே எனது இரைகள் சிறுகதை, 1977 நவம்பர் மாதத்தில் அனைத்து தமிழக இதழ்களிலும் வெளிவந்த 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளிலும் சிறந்ததாக 'இலக்கியச் சிந்தனை' என்கிற மதிப்புமிக்க அமைப்பால் தேர்வு செய்யப்பட்டு பரிசும் வழங்கியது.அதே ஆண்டில் அதே அமைப்பு வெளியிட்ட அந்த ஆண்டின் மிகச் சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாக அதுவும் உள்ளது.சிறுகதையின் பிரம்மரிஷி என போற்றப்படும் லா.ச.ரா அவர்களின் சிறுகதையும் அதில் அடங்கும். அன்று அந்த ஜாம்பவான் நின்றிருந்த வரிசையில் நின்றிருந்தவன் இந்த மண்ணைச் சார்ந்த ஒரு 24 வயது இளைஞன்.

அதென்ன எனக்கான பெருமை மட்டுமா? இந்நாட்டு தமிழ் புத்திலக்கியத்திற்கு கிடைத்த பெருமையல்லவா? இது எப்படி சாத்தியப்பட்டது? ஒரு போட்டியில் கலந்து கொண்டதன் வடூதானே? எனவே, ஒரு படைப்பாளனின் வளர்ச்சியில், அதன் பங்கு என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான். எந்தக் காலத்திலும் அதற்கு எதிரானவன் அல்ல.நான் எதிர்ப்பது, அதனை மட்டுமே (பரிசு மாலை சால்வை) முன்னிறுத்தி, படைப்பாளன் மேற்கொள்ளும் சில சமரசங்களை. அத்தகைய ஒரு படைப்பாளனின் ஆளுமையில் நிகழ்த்தும் உடைவுகள் கணிசமானது என்பதை, எனது இந்த நீண்ட இலக்கியப் பயணத்தில் கூர்ந்து கவனித்து வருபவன் நான். எழுத்தாளன் என்பவன் அநியாயங்களுக்கு எதிரானவனாகவும் நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பவனாகுமே, உலகம் முழுக்க அறியப்பட்டுள்ளான். அவனது அந்த நிலைப்பாட்டை ஆட்டங்காணச் செய்துவிடும் சக்தி இவற்றிற்கு உண்டு. பரிசு மாலை சால்வை வேண்டாமென்பது எனது கட்சியல்ல. இலக்கியவாதிகள், அதனை மட்டுமே முதன்மைப்படுத்தி, இயங்கலாகாது என்பதே என் வாதம். அரசியல்வாதிகள் வேண்டுமானால், அதனை முதன்மைப்படுத்தி இயங்லாம். அது அவர்கள் இயல்பு. படைப்பாளன் அரசியல்வாதியல்ல. இருக்கவும் கூடாது. நமது இளம் தலைமுறை, அந்தப் பொறியியல் வலிய சென்று சிக்கும்போது ஒரு தந்தையின் ஆதங்கத்தோடு எச்சரித்து தடுக்க முற்படுகிறேன். இதைத் தவறான அர்த்தப்படுத்தலோடு இலக்கியத்திற்கு சம்பந்தமில்லாத, சில போலி இலக்கிய அரசியல்வாதிகள், திரித்துக்கூறி, குழப்பி, அந்த நெருப்பில் குளிர் காய்ந்து லாபமடைய முற்படுகிறார்கள்.

அஞ்சடியில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வாதப் பிரதிவாதங்களின் உள் சரடு அதுதான். இந்த இருவேறு சக்திகளிடையே நடக்கும் மல்லுக்கட்டல்தான். அது ம்டடுமே. எங்குமே எதிலுமே எந்தப் போராட்டத்திலுமே முதலில் போலிகளின் குரல் ஓங்கி ஒலிப்பது போல் தோற்றம் காட்டும். அது வெறும் தோற்றமே. இறுதியில் வென்று நிற்பதென்னவோ உண்மை மட்டுமே.
சீ.முத்துசாமி

No comments:

Post a Comment