Thursday, April 9, 2009

சே குவேரா எழுத்தாளரா?

அனைவருக்கும் வணக்கம்,
சே குவேரா எழுத்தாளரா என அன்பர் வினவியிருந்தார்.நேரம் இருப்பின் அவருடைய 'மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்' மற்றும் 'பொலிவிய நாட்குறிப்புகள்' வாசிக்கவும்.லோர்காவிலும் நெருதாவிலும் திளைத்தவர் 'சே'.இலக்கிய வாசிப்பு அவர் உவந்து ஏற்ற பணி.போராட்ட்வாத உடலால் இலக்கிய உயிரை வலிந்து கொன்றவர்.முற்போக்கு எழுத்துக்க்ள் பெரிதும் விதந்தோதும் நேரிடையான எழுத்து முறையை விரும்பினாலும் , வாழ்வு அவர் முன்னே வைத்திருந்த சவால்களும்,இள வயது முதல் விடாமல் தொடர்ந்த நோய்மையின் வாதையும் ஏற்படுத்திய மனசிக்கல்கள் குறித்து அவர் தாய்க்கு எழுதிய கடிதங்களில் உள் உறையும் இலக்கிய தரம் நல்ல வாசகர்கள் உடனே அடையாளம் கண்டு கொள்வர்.முதலாளிய கணவாயின் கோரப்பிடியில் விழிப்பிதுங்கி துடிக்கும் இன்றைய உலகத்தில் 'சே' மறுவாசிப்புக்கு மட்டுமல்ல தொடர்வாசிப்புக்கும் உட்படுத்த வேண்டியவர்.
அன்புடன்,
சு.யுவராஜன்.

No comments:

Post a Comment