Wednesday, April 8, 2009

சப்பென்று ஆக்கிவிட்டீர்கள்!

வணக்கம்.

இவ்வளவு விவாதங்களும் கருத்துக்களும் தெரிவித்த நிலையில் என்னையே நான் இல்லை என்று சொல்லி, எல்லாவற்றையும் சப்பென்று ஆக்கிவிட்டீர்கள். பிறகு இவ்வளவு விவாதித்து என்ன பயன்?

மஹாத்மன் அவர்கள் என்னைச் சந்திக்க நேரும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது அப்பொழுது உங்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்வீர்கள் எனத் தெரியவில்லை. விரைவில் கே.பா தொடங்கும் "ஒரு கோப்பை தேநீர்" கலந்துரையாடல் நிகழ்விற்க்கு தலைநகரம் வரும்போது நான் உங்களைச் சந்தித்து என்னை வெளிப்படுத்திக் கொள்ள நான் தயார். இப்பொழுது இதுதான் என்னை நான் நிருபித்துக் கொள்ள் வழி.

அதென்ன கணினியில் முகம் தெரியாது என்பதற்காக இப்படி என்னையே நான் இல்லை என்றும் என்னையும் குமார் என்பவரையும் இணைப்பதும். . என்னாப்பா இது? வேடிக்கை...

இனி எப்படி நான் விவாதிப்பது?

யார் அந்த மஹாத்மனின் நண்பர்கள்? அவர்களை அஞ்சடிக்குள் வரச் சொல்லுங்கள். பேசலாம். எப்படி என்னைப் பற்றி தெரிந்து கொண்டார்களென தெரிந்து கொள்ளலாம்.

சரி. சீ.முத்துசாமி அவர்கள் அவருடைய கடித்தத்தின் கடைசி பத்தியில் மிக தேளிவாக நிதானமாகப் பேசியுள்ளார். மிக்க மகிழ்ச்சி. எனக்கென்று ஒரு கேள்வி. யார் தான் இங்கு பரிப்பூரணம் சார்?

எல்லாரிடமும் சிறு சிறு குறைபாடுகளும் பலவீனங்களும் உண்டுதானே? உங்களிடமும் சில பலவீனங்கள் இருக்கத்தானே செய்யும்.

ஒரு அப்பாவின் ஆதங்கத்துடன் செயல்படும் நீங்கள், ஏன் இப்படியொரு கேலியும் கிண்டலும்? இதைத்தான் நான் கேட்கிறேன். அப்பா இப்படி கேலியும் கிண்டலும் அடிக்கலாமா?

ஒரு மகனை அரவனைப்பதும் இன்னொரு மகனை புறக்கனிபதும்தான் அப்பாவின் குணமா? யாரையும் இங்கு திருப்திப்படுத்த முடியாத நிலைதான் இங்கு எல்லோருக்கும். எல்லாம் வேளைகளிலும் பிறர் நாம் நினைப்பது போல இருப்பதில்லை. அவரவர் பாடு அவரவருக்கு. அவர்களின் வாழ்வை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்:. அதில் குற்றம் கண்டறிந்து அதைக் குறைவாக மதிப்பிடுவது நாம் பாடு. இதற்கிடையில் இதையெல்லாம் ஒரு புறந்தள்ளிவிட்டு இலக்கியத்தை வளர்க்க முயலலாம்.

எல்லோரையும் நாம் பொருட்படுத்திக் கொண்டு விவாதிக்க எதிர்வினையாற்ற தொடங்கிவிட்டால், படைப்பிலக்கியத்தை வளர்ப்பது யார்?

கோமளா

No comments:

Post a Comment