Thursday, April 2, 2009

யார் எழுத்தளன்? மகாத்மா காந்தியா?

முதலாம் பரிசு இரண்டாம் பரிசு. . இதுவெல்லாம் ஒரு எழுத்தாளரை நிர்ணயிக்கும் பிம்பங்கள் அல்ல. பரிசும் போட்டியும் ஒரு எழுத்தாளருக்கு அடையாளம் கிடைக்கும்வரை சாத்தியப்படும் விஷயங்கள். தனித்த அடையாளங்கள் கிடைத்த பிறகு போட்டிகளில் பங்கெடுப்பதைக் குறைத்துக் கொள்வதே சிறப்பு என நினைக்கிறேன். இருந்தாலும் அது அந்த எழுத்தாளரின் விருப்பம். களம் இருக்கும்வரை போட்டி போட்டுப் பார்ப்பது தன் சுயம் சார்ந்தவை. அதைக் கேலி செய்ய பல பேர் கொளுப்பெடுத்து வந்தாலும் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாது களத்தில் ஒய்வில்லாமல் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

கடாரத்து கோ.புண்ணியவான் இந்த வயதிலும் பேரவைக் கதைகளில் பங்கெடுத்து பரிசு பெறுவது சிலருக்குக் கேலியாக இருக்கலாம். "என்னாடா இத்தன வயசாச்சி இன்னுமா போட்டில பங்கெடுக்கனும்னு" யாராவது சொல்லலாம். ஆனால் எந்த வயதில் என்ன செய்ய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் வாய் வலிக்க கத்திக் கொள்ளவும். அதனால் யாருக்கும் சிரமம் இல்லை.

மஹாத்மன் அவர்கள் தமது தர்க்க திறனால், பொய்யையும் தவறையும் கூட சாதித்துக் காட்டக்கூடியவர் என நினைக்கிறேன். உமது வாத திறமையால் "நாஸ்டர்டாம'தனத்தை இங்கு காட்ட வேண்டாம். இங்கு ஓடிக் கொண்டிருப்பது இலக்கிய விவாதம். உமக்கென்ன கொளுப்பா? பைபிள் விவாதத்திற்கு அழைக்கிறாய் பிறரை. தீர்க்கத்தரிசனம் சொல்பவர்கள் வேண்டுமென்றால் கடவுள் போல இருந்துவிட்டு போகட்டும், அவர்கள் எழுத்தாளர்கள் (அதுவும் எழுத்தின் வகையாக இருந்தாலும்) என்று புலம்ப வேண்டாம். மகாத்மா காந்தியைக்கூட எழுத்தாள்ர் என்று சொல்லிவிடுவாய் போல? அவர் சுதந்திர தந்தை. தமது எழுத்தை போராட்டத்திற்காக பயன்படுத்தியவர்.

பிழைப்பு நடத்த இதுநாள்வரையில் உமக்கு வழியில்லாதவரை. . நீ கடவுளின் எதிரி, படைத்தவனுக்குச் சவால் விடக்கூடிடவன் ஆனால் இப்பொழுது ஒரு பிழைப்பு கிடைத்த பின், சமூக சீர்த்திருத்தவாதி. நீ எழுதுக் கொண்டிருக்கிறாய் என்பதற்காக, சமூக சீர்திருத்தம், பிரச்சார வகையிலான எல்லாம் எழுத்தையும் யதார்த்த எழுத்து வகைக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. தமது எழுத்தின் மூலம் எல்லாம் சிபாரிசுகளையும் சமூகத்திற்கான ஒழுக்க தீர்மானங்களையும் சொல்லிக் கொண்டு இருப்பவன் எழுத்தாளன் என்கிற அடையாளத்தைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

நீ வேண்டுமென்றால், உமது கதையின் கடசியில் "இதனால் நான் மக்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் எல்லோரும் கண்டிப்பாக நேர்மையாக இருக்க வேண்டும். , எல்லாரும் நாட்டின் இறையாண்மைக்காக போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டு நீயும் ஒரு எழுத்தாளன் என்று பிதற்றிக் கொண்டு இருக்கவும்.

வணக்கம்
அந்தோணி

No comments:

Post a Comment