Friday, March 27, 2009

இந்திரனுக்கும் இமெயில் அனுப்பும் மாயாவதியோ?

இனி வரவேண்டாமென்று இருந்தேன். என்ன செய்வது. .

இந்திரனுக்கு இமெயில் அனுப்புவது, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு பாலபிஷேகம் செய்வது என்று சொல்வதுதான் முதிர்ச்சியற்ற பேச்சு, கனவுலகில் முனகும் நம்பகத்தன்மையற்ற வசனங்கள். இதை முன்வைத்துப் பிறரை முதிர்ச்சியற்றவர்கள் என இந்திரன் சொன்னதாக தாமே தம்பட்டம் அடித்துக் கொண்ட வசைப்பாடல்களை எப்படி அஞ்சடி அனுமதித்தது?

பிறர் எப்படி பிழைப்பை ஓட்ட வேண்டும் என்று கட்டளையிடும் அளவிற்கு சீ.முத்துசாமி முத்தியத்தனமாகப் பேசி சிக்கிக் கொண்டுள்ளார். பரிசு பெறுவது போட்டியில் கலந்து கொள்வது பிறரின் விருப்பம். சொல்லப் போனால் போட்டிகள் ஆக்கங்கள் உருவாகத் துனைப் புரிகின்றது என்றே சொல்லலாம். அது ஒரு உந்து சக்தி மாதிரி. அதில் குற்றம் கண்டுபிடித்தால் சீ.முத்துசாமி இதுவரை எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசு பெறாதவராக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இவரின் பேச்சு ஒரு போலி அரசியலைப் போன்றது என்பது இங்கு நிரூபணம் ஆகின்றது. இவர் இப்படி வசைப்பாடி திரியும் எத்தனைப் பேருக்கு குருநாதராக இருக்கிறாரோ?

மாயாவாதிகளின் பேச்சுக்கெல்லாம் என்றுமே மதிப்பிருக்காது போல

கோமளா

2 comments:

  1. //சீ.முத்துசாமி இதுவரை எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசு பெறாதவராக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இவரின் பேச்சு ஒரு போலி அரசியலைப் போன்றது என்பது இங்கு நிரூபணம் ஆகின்றது.///

    noted

    ReplyDelete
  2. //இவர் இப்படி வசைப்பாடி திரியும் எத்தனைப் பேருக்கு குருநாதராக இருக்கிறாரோ?
    ///
    noted

    ReplyDelete