Friday, March 27, 2009

நான் ஆரம்பத்திலே சொன்ன மாதிரி ...


நான் ஆரம்பத்திலே சொன்ன மாதிரி தனிமனித தாக்குதல்களையும் பிறரை எல்லோரும் அறியும்படி திட்டுவதும் கண்டிக்கத்தக்கது. அதை மூத்த எழுத்தாளர்கள் (சீ.முத்துசாமி) செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. யார் மீது கோபமோ விமர்சனமோ இருந்தால் அதை நேருக்கு நேர் பேசி விவாதிப்பதுதான் எழுத்தாளர்களுக்கு சிறப்பு. இங்கு வந்து விவாதம் என்கிற பெயரில் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும். தர்க்கரீதியிலான எதிர்ப்புகள் அல்ல இது, தனிமனிதனையும் அவன் சார்ந்த பிறரையும் கேலி செய்து தாக்குவது.. இதற்கெல்லாம் ஒருவர் திராணி பெற்றிருக்க வேண்டி இல்லை.

அண்ணன் பாலமுருகன் இதையெல்லாம் பொருட்டாக கருதாமல், இது ஒரு தர்க்கரீதியிலான எதிர்ப்பே இல்லை, (தனிமனித வசைப்பாடல்) அமைதியாக இருப்பதே உங்கள் சிறப்பு. பிறரைப் பற்றி கவலைப்படாமல் படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

20 வயதே ஆன எனக்குத் தெரியும் விஷயம் கூட சீ.முத்துசாமிக்குத் தெரியவில்லையோ என தோன்றுகிறது.

விக்னேஸ்வரன் குப்புசாமி
பேராக்

No comments:

Post a Comment