Monday, March 23, 2009

கெடுத்திடாதிங்கப்பா!

'ஒன்றுமில்லாமல்' அந்த 'ஒன்றும்' அன்று விலகிக்கொள்ளவில்லை, 'ஒன்றுமில்லாமல்' இன்னொன்றும் இன்று விலகிக்கொண்டிருக்காது...இந்த விவாதம் தொடர்ந்தால், வெகு விரைவில் பல விலகல்கள் நிகழலாம்.அப்போது, அந்த 'ஒன்றின்' கூடாரம் காலியாகலாம்.புதிதாக ஆள் சேர்த்து கூடாரத்தை நிரப்பிவிடும் திறன் கொண்டதுதான் அந்த 'ஒன்று' என்றாலும், அதற்கு முன்பான நொடிகளில் , அந்த 'ஒன்றின்' அலரலும் அரற்றலும் பிதற்றலும் பெரு ஓசையாக எழும்பி, விரிந்து பரந்த அநங்கத்தை முட்டலாம்.

அங்கிருக்கும் முப்பது முக்கோடி தேவர்களின் காதில் அது விழ, அதன் சோக இழையில் அவர்கள் மனமகிழ்ந்து கண்ணீர் மழ்கி... அந்தப் பரிதாபக்குரல் எழக்காரணமான, நம் பக்கம் அவர்களின் கோப பார்வை திரும்பலாம்.அப்போது, இங்கே , அஞ்சடிக்காக மௌசை கிளிக் செய்து கொண்டிருகும் நமது கைவிரல்கள், அவர்களின் கண்ணில் படலாம்.அப்புறமென்ன? அதோகதிதான் நம் கதி.

ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா விரல்களின் பாணியில், மௌசை முடுக்கும் நமது விரல்கள் முறுக்கி கோணிக்கொள்ள...ஐயோ அம்மா வென்று அலரிக்கொன்டு தேவர்களின் கருணை வேண்டி கோயில் கோயிலாக ஓட வேண்டி வரலாம்.தேவையா இது நமக்கு. சற்றே உட்கார்ந்து, நிதானமாகவும் தீவிரமாகவும் யோசிக்க வேன்டிய தருணமல்லவா இத்?.அவசியம் யோசியுங்கள்.அனுபவப்பட்டவன் சொல்கிறேன்.குறிப்பாக, நவீனும் மகாத்மனும் , ப்ரிக் பீல்ஸில் உள்ள, ஏதாவதொரு கோப்பிக்கடையில் உட்கார்ந்து , ஆழ்ந்து , ஒரு பின் நவீனத்துவ படைப்பை வாசிக்கும் தீவிரத்துடன் யோசியுங்கள்.அப்போதுதான் உங்கள் செயலில் உள்ளடங்கியுள்ள விபரீதம் புரியும்.

நான் வாசித்து விட்டேன்.முடிவும் செய்து விட்டேன்.இனி இது குறித்து எழுத, மறந்தும், கனவிலும் மௌசை கிளிக் பண்ணமாட்டேன் என சத்தியம் செய்து , முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன்.காரணம், நான் உங்களைப்போல் இளமை ஊஞ்சலாடும் பருவத்தினன் அல்ல.மூப்பேறிய கிழம்.நானெல்லாம் , இதற்கு மேல் தினமும் ஒவ்வொரு கோயிலாக வளைய வந்து விரல்களை சொஸ்தமாக்க வேண்டுதல் வைப்பதில், சில பல ஆண்டுகளைக் கழிக்க இயலாது.
இருக்கப்போவது இன்னும் கொஞ்சம் நாள்.அதுவரை யேனும் இப்படி ஜாலியாக ஏதேனும் வம்பு தும்புகளில் மாட்டிக்கொண்டு தனிமையில், கணினி முன்பு உட்கார்ந்து மௌசை கிளிகி எஞ்சிய இரவுகளை ஆனந்தமாகக் கொண்டாட வேண்டும்.வீணா அத கெடுத்திடாதிங்கப்பா!

சீ.முத்துசாமி

No comments:

Post a Comment