Friday, March 20, 2009

அநங்கத்தின் நிலைபாடுகளும் போலி கண்ணீரும்

அநங்கத்தின் நிலைபாடுகளும் போலி கண்ணீரும் அநங்கத்தின் ஆசிரியர் என்கிற வகையில் அதன் நிலைபாடுகள் குறித்து சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஒரு சிலர் "அஞ்சடியில்" அநங்கம் நிலைபாடுகள் குறித்து குறும்பு, கிண்டல் கேலியெல்லாம் அடித்துக் கொள்கிறார்கள்.

எது எப்படியிருப்பினும் சிற்றிதழுக்கென தனித்துவமான சுதந்திரமும் செயல்பாடுகளும் உண்டு. அதில் யாரும் தலையீடவோ குறுக்கிடவோ இயலாது. சிபாரிசு ஏதும் இல்லாமலே சிற்றிதழ்கள் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும். யாரும் கண்ணீரை வீணாக்க வேண்டாம். போலி வேண்டுல்தகளும் எங்களுக்கு அனாவசியம்.

பாவண்ணன் அவர்களுக்கு இரண்டே பக்கமும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2 பக்கமும் கொடுத்துவிட்டதால், மீதி 56 பக்கங்கள் மலேசிய எழுத்தாளர்களுக்கே கொடுத்த அநங்கத்தின் நிலைபாடுகளை, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பக்கத்திலுள்ள பிரபஞ்சத்தின் தேவர்களையும் சேர்த்துக் கொண்டு, 4 தலை பிரம்மா, 10 தலை பிரம்மாக்கள், 100 தலை பிரம்மாக்கள் என்று எல்லோருக்கும் பாலாபிஷேகம் செய்து கொண்டாடுகிறோம்.

வழிந்தொழுகும் மீதி பாலை சில கோமாளி கிழட்டுப் பக்தர்கள் எடுத்து அருந்தி கொள்ளட்டும். (இதை இங்கு மிகவும் கேலியாக முன்வைப்பதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்)

அநங்கத்தின் தனிபட்ட நிலைபாடுகள்:
1) மலேசிய மூத்த எழுத்தாளர்களையும் இளம் படைப்பாளர்களையும் ஒரே களத்தில் இணைப்பது. ( சைபீர், கோ.புண்ணியவான், ரெ.கார்த்திகேசு, க.பாக்கியம் போன்ற மூத்த எழுத்தாளர்கள் அநங்கத்தில் எழுதிக் கொண்டிருப்பதை அறியாதவர்கள், இனியாவது படித்துப் பார்த்துவிட்டு தெரிந்து கொள்ளவும். . )
2) தொடர்ந்து மலேசிய இலக்கியத்தை வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் ( அநங்கம் இதழ் இலங்கை, இந்தியா , சிங்கப்பூர், பாரிஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது)

3) சிங்கப்பூர் இலக்கியவாதிகளையும் இந்தியா மற்றும் பிறநாட்டு இலக்கியவாதிகளையும் அநங்கத்தில் அவ்வப்போது இணைத்துக் கொள்வது. ( அநங்கம்1-இல் எஸ்.ராமகிருஷ்ணன், அநங்க 2- அமெரிக்கா வாழ் எழுத்தாளர் கோகுலன், அநங்கம் 3- பாவண்னன், தொடர்ந்து அநங்கம் 4-இல் ஷோபா சக்தி அவர்கள்)4) புதிய இளம் படைப்பாளிகளை அநங்கத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் ( அநங்கம் 1-இல் செ.நவீன், அநங்கம் 2-இல் கோமளாதேவி , அநங்கம் 3-இல் இடம்பெறவில்லை, தொடர்ந்து அநங்கம் 4-இல் யோகேஸ்வரந் இவர்கள் யாவரும் மலேசிய புதிய எழுத்தாளர்கள்) மேலும் ஒரு சில வரிகள், இவையாவும் அநங்கத்தின் ஆசிரியர் குழுவால் ஆலோசிக்கப்பட்டு உருவாக்கிய நிலைபாடுகள்.

இன்று தமிழக சிற்றிதழ்களிலும் நம் மலேசிய படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெறுகின்றன. அவர்களும் நம் படைப்பாளிகளுக்குப் பக்கங்கள் ஒதுக்கி, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இலக்கிய பகிர்தலை அச்சில் ஏற்படுத்துகிறார்கள். நம் மலேசிய வாசகர்களும் ஒரு சில அயல் நாட்டு எழுத்தாளர்களை இதழ் மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. உயிரெழுத்து, யுகமாயினி, வார்த்தை, காலச்சுவடு போன்ற இதழ்களில் நமது மலேசிய இளம் மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகள் கவிதைகள் பத்திகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இங்கு என்ன அவர்கள் நமது வாலையா பிடிக்கிறார்கள்? இது வால் பிடிக்கிறமோ இல்லையா என்பது கேள்வியே இல்லை. அந்தந்த சிற்றிதழின் தனிபட்ட நிலைபாடுகள் சுதந்திரம் சார்ந்தவை.

மணிமொழி சொன்னது போல யர்ரும் கடவுள் அல்ல ஒரு சிற்றிதழின் நிலைபாடுகளைகூட சுயமாகத் தீர்மானித்துக் கொள்ள.

அன்புடன்
கே.பாலமுருகன்

No comments:

Post a Comment