Saturday, March 28, 2009

யார் சொன்னது 100 தலை பிரம்மாக்கள் இல்லையென்று?

சீ.முத்துசாமிக்கு வடநாட்டு செவ்வியல் புராணங்கள்/வேதங்கள் குறித்துக் கொஞ்சம்கூட பரிச்சயம் இல்லை போல. அந்தோ பரிதாபம். . அதனால்தான் 4 தலை பிரம்மாக்கள், 100 தலை பிரம்மாக்கள் பற்றி தெரியாமல் இருக்கிறார். வடநாட்டு செவ்வியல் வேதங்களில் முக்கியமானது 19 காண்டங்கள் கொண்ட ஷிரிமட் பாகவதம் ஆகும். அதற்கான தமிழ் விளக்கவுரைகளும் இந்தியாவிலிருந்தே எழுதப்பட்டுள்ளன. பாகவதம் 4 ஆவது காண்டத்தில் கடவுள் பற்றிய அம்சங்களின் 32 ஆவது பதத்தில் சக பிரபஞ்சங்கள் பற்றியும் அதன் பிரம்மாக்கள் பற்றியும் தெளிவான விளக்கம் இருக்கும். 4 தலை பிரம்மா எனக்குறிப்பிடுவது நம் பூமியின் பிரம்மா, அதே போல எண்ணற்ற பிரபஞ்சங்களும் உலகங்களும் இருக்க, அதன் பிரம்மாக்கள் பற்றியும் சொல்லப்பட்டுருக்கின்றன. அதில் 100 தலை பிரம்மா குறித்தும் எழுதப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக நமது பூமிக்கு 1 நிலாதான் உண்டு ஆனால் பக்கத்துக் கிரகங்களுக்கு 10 க்கு மேல் நிலாக்கள் உள்ளன.

ஆகையால் யார் இங்கே தெனாலி இராமன் என்று வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். பிரம்மா இருக்கிறாரா அது நம்பகத்தன்மையா என்ற கேள்வி வராது என நினைக்கிறேன், காரணம் இந்திரன் தேவலோகம்வரை நம்பிக்கை இருப்பதால், இது பற்றியும் சந்தேகம் இல்லை. அப்படியும் வேண்டுமென்றால், பாகவதத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். அதற்காக பாவம் மீண்டும் ஏன் இந்திரனின் போலி குரலிலிருந்து கதற வேண்டும்?

மேலும், ஒரு இடத்தில் பெயர் சொல்ல பயமா? என்று கேட்டுவிட்டு, குருநாதரின் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லையே. ஏன் அந்தக் குருநாதர் மீது அவ்வளவு பயமா? ஆ. . ஆ. . ஆ. . . நகைச்சுவை பண்ணாதீங்க சாமி. .

குமார்
பாடாங் செராய்

No comments:

Post a Comment