Tuesday, April 14, 2009

எதிர்வினை

மிகவும் ஆய்வு நோக்கிலும் பொறுப்புணர்வோடும் செயற்படுவதாக வாயடிக்கும் ‘காலச்சுவடு’ம் வம்புத்தனத்தைச் செய்யத் தவறவில்லை. அப்பத்திரிகையின் இம்மாத இதழில் சை. பீர்முகம்மது "காட்டிக்கொடுக்கும் கருணா: ஒரு போராளி துரோகியான கதை" என்றொரு கட்டுரையை எழுதியுள்ளார். இது ஒன்றும் அரசியல் ஆய்வுக் கட்டுரை கிடையாது. இதுவும் பா.ராகவன் எழுதுவதைப்போல ‘புலனாய்வு’க் கட்டுரைதான். சை. பீர்முகம்மது கருணாவைப் பாரத்தபோதே மின்வெட்டும் நேரத்தில் கருணா நம்பிக்கைக்குரிய மனிதர் அல்ல என்பதைக் கண்டுபிடித்துவிட்டாராம். பன்னாட்டு விமானநிலைய சோதனைகளின்போது நூற்றுக்கணக்கான காவற்துறையினரையும் அதிநவீன கருவிகளையும் இனிப் பயன்படுத்தத் தேவையில்லை. சை. பீர்முகம்மதுவை வாயிலில் நிறுத்தி வைத்தால் போதும். தீவிரவாதிகளை மின்வெட்டும் நேரத்தில் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்.

கட்டுரையில் பீர்முகம்மதுவின் கண்டுபிடிப்புகளைப் படித்தால் பிரபாகரனே அதிர்ச்சியடைவார். மட்டக்களப்புக் கட்டளைத் தளபதி கண்ணன் அல்லது கர்ணன் என்றொரு கற்பனைத் தளபதியை உருவாக்கும் சை.பீர்முகம்மது அந்த இல்லாத தளபதி உடைவுக்கு முன்னமே கருணாவால் கொல்லப்பட்டார் என்றொரு செய்தியைச் சொல்கிறார். இந்த முழுப்பிழையான தகவலைக் கூட விட்டுவிடலாம். கிட்டுவும் புலேந்திரனும் குமரப்பாவும் வந்த கப்பலை இந்திய கடற்படை வழிமறித்ததால் அவர்கள் கப்பலை வெடிக்க வைத்து ஒருசேர இறந்தார்கள் என்ற ஒரு தகவல் போதாதா சை. பீர்முகம்மதுவின் புலனாய்வுத் திறமைக்கு. பன்னாடை! பன்னாடை!!
ஷோபா சக்தி
தொடர்ந்து படிக்க...http://www.satiyakadatasi.com/

1 comment: