Tuesday, March 31, 2009

மஹாத்மனின் “wayang kulit” ஆட்டம் அசத்தல்

மஹாதமன் அவர்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். தமக்கு சாதகமான விஷயத்தில் மட்டும், தமது பாதுகாப்பிற்கு விளைவு வரதா விஷயத்தில் மட்டும் தட்டிக் கேட்டுக் கொண்டு எதிர்வினை செய்து கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. தாம் தட்டிக் கேட்கும் மனிதன், நான் பரிபூரண ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியைப் போல வேஷம் போட்டுக் காட்டும் அவரின் "wayang kulit" ஆட்டத்தைக் கண்டு சிரிப்புத்தான் வருது.எங்கே உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எல்லாவற்றையும் இழந்து நல்ல ஆரோக்கியமான மருத்துவ சேவையும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அந்த 5 பேருக்காக தட்டிக் கேட்டு மஹாத்மன் உண்னவிரதமோ அல்லது உள்நாட்டு சட்டத்தை எதிர்த்து அரசாங்கத்திற்கு சவாலாக இருக்க வேண்டியதுதானே? அவர்களும் ஒடுக்கப்பட்ட நமக்காக கேள்வி எழுப்பியவர்கள்தானே. தட்டிக் கேட்கிறேன் என்று சுயப் புகழ் பாடும் அவர் இதையெல்லாம் செய்யாமல் சும்மா ஒரு நாளிதழின் பின்னால் இருந்து கொண்டு இப்படி தமக்கு எந்தப் பாதிப்பும் வராத சுவராகப் பார்த்து மிகப் பத்திரமாக இருக்கிறார் போல. புனை பெயர் கொண்டு எழுதினாலும் எழுதுவார்.

அவர் இப்படியெல்லாம் உண்னாவிரதம் அல்லது அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வியெழுப்பவது போன்ற விஷயம் அல்லது வழி எனக்கு அனாவசியம் என்றால் அதே போலத்தான் பிறருக்கும் வேறு வழி இருப்பதை அவர் உணர வேண்டும். இவர் தட்டிக் கேட்க ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வது நியாயம் என்றால் பிறரும் இவர் வழியிலேயே வந்து தட்டிக் கேட்க வேண்டுமாம், இல்லையென்றால் அவர்களெல்லாம் தன் சொந்தப் பெயர் களங்கப்படாமல் ஒதுங்கி நிற்பவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள். இப்பொழுது என்னால் சொல்ல முடியும் நீங்கள் அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க திராணியில்லாதவர். அல்லது ஒரு பாதுகாப்பு வலையத்தில் இருந்து கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு பயந்து கொண்டு சும்மா பில்டாப் செய்து கொண்டு தானும் தட்டிக் கேட்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்வதற்கு சமம். தலைநகரில் நீங்கள் பண்ணும் பிழைப்புக் குறித்து எனக்கும் சிலது தெரியும். இங்கே அதைப் பதிவிடுவது என்னைப் பொறுத்தவரை அநாகரிகம்தான்.

தட்டிக் கேட்பது என்றால், இவர்களுக்கு மட்டும்தான் நான் தட்டிக் கேட்பேன் என்று சொல்லிவிட முடியுமா என்ன? எதெல்லாம் அநியாங்களோ அதையெல்லாம் தட்டிக் கேட்கத்தான் வேண்டும் (உங்களின் கூற்றுபடி) ஹிண்ராப் புரட்சி நடந்த இத்தனை வருடங்களில் எங்கே போனார் இவர்? அப்பொழுதெல்லாம் தட்டிக் கேட்கும் தன்மை எழவில்லையோ? அப்படினா எல்லோருக்கும் ஒரு காலம் வரும் போல தட்டிக் கேட்க. இவர் சொல்வது போல நினைத்த நேரம் நாம் எல்லாவற்றையும் நம் தொழிலையும் விட்டுவிட்டு நடு ரோட்டில் நின்றுகொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் போல, கூச்சலிட்டு அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டும் போல. இப்படியெல்லாம் பேசும் இவர் அப்படி என்னா செய்து கிழித்துவிட்டார். . உலகத்தைச் சுற்றி பார்க்கும் முன் உம்மைச் சுற்றி பாருமய்யா

குமார்
பாடாங் செராய்

No comments:

Post a Comment