Thursday, March 26, 2009

ஒரு சில வரிகளுடன். . . .


1. தங்களின் மாற்றுக் கருத்துக்கு மிக்க நன்றி நவீன்

2. அதைப் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் அதை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்

3. பார்வைகள் வேறுபடுகின்றன, ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து விபச்சாரியின் தனி சுதந்திரம் பற்றி கூறினேன்

4. சமூகத்தின் மனநிலை பற்றி எந்த விபச்சாரிகளும் கவலைப்படுவதற்கில்லை காரணம் அந்தச் சமூகத்திலிருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து காம பசியைத் தீர்த்துக் கொண்டு போகிறார்கள். வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மனநிலை. .

5. விபச்சாரிகள் பற்றி பேசுவதால், அவர்களின் உலகத்திற்குள் கொஞ்சம் போய் பாருங்கள் அல்லது வந்து பாருங்கள். . என் பால்ய தோழி ஒருவள் இன்று இந்த நிலையில்தான் இருக்கிறாள், ஆகையால் அவளுடைய மன இருப்புகளையும் நீங்கள் சொல்லும் அந்தச் சமூகத்தின் மனநிலைகளைப் பற்றியும் கேட்டால் மிஞ்சுவது வெறும் கெட்ட வார்த்தைகள்தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

6. ஆண் மொழியிலேயே எல்லாவற்றையும் பார்க்கும் ஒருசிலரின் கருத்துகளுக்கு முரண்பாடுகள் உண்டு, விபச்சாரிகளின் உலகம் குறித்து.

7. எது எப்படியிருப்பினும் எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்-

நன்றி வணக்கம்
கோமளா

No comments:

Post a Comment