Wednesday, March 25, 2009

அஞ்சடி நிர்வாகி...

வணக்கம். பாலமுருகன் அண்ணன் அவர்கள்தான் வல்லினத்தையும் அநங்கத்தையும் மேலும் சில தீவிர இதழ்களையும் இலக்கியத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்தான் தங்களின் அஞ்சடி பதிவின் விவரங்களையும் அனுப்பி வைத்தார். ஒருமுறை சிறுகதை கருத்தரங்கம் நடத்த கோலா கங்சார் வந்திருந்தபோது பழக்கமாகியவர்.

இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்ச்சையைப் பற்றியும் பாலமுருகன் எழுதிய கட்டுரையில் வெளிப்பட்ட "விபச்சாரிகள்" குறித்த வரிகளைப் பற்றியும் இங்கு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. படிக்க மிக வருத்தமாக உள்ளது.

ஆரம்ப பதிவில் ஆளாளுக்கு இப்படிப் பயங்கர தாக்குதலில் இறங்கியிருப்பது எழுத்தாளனாக வேண்டும் என்கிற எனது ஆரம்ப மனநிலைகளுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. தயவு செய்து எனது வேண்டுகோள், பாலமுருகன், மஹாத்மன், நவீன் என்ற தனிநபரின் பெயரைக் குறிபிட்டுப் பேசுவதை நீக்கீவிட்டு வெறும் விவாதத்தை மட்டும் எடுத்துச் செல்லுமாறு அஞ்சடி நிர்வாகியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் சொன்னதாகவே இருக்கட்டும், இப்பொழுது சிவம் அண்ணனின் பதிவும் நவீன் அண்ணனின் பதிவும் தனிநபர் தாக்குதலிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்து விவாதம் பற்றி பேசுகின்றன. இப்படியே தொடருங்கள். கோமளா மீண்டும் நடுவில் வந்து மீண்டும் சிலரை வம்புக்கிளுத்தது போல தோன்றுகிறது.

இப்படியே சென்றால் இனியும் சிலர் உள்ளே வந்து மீண்டும் தன்னைத் தற்காத்துக் கொள்ள பாடுபடுவார் என்று தெரிகிறது. அஞ்சடி நிர்வாகி, தயவு செய்து இது நடக்காமல் கவனித்துக் கொள்ளவும். தனி மனித தாக்குதல் இடம்பெற்றால் அதைப் பதிவு செய்வது குறித்து ஆலோசியுங்கள்.

என்னைப் போன்ற இணைய அறிமுகம் உள்ள பலர், பல புது எழுத்தாளர்கள் இதைப் பார்க்க நேர்ந்தால் பலரின் பெயர்கள் பாதிக்கப்படும். இதை ஒரு பத்திரிக்கையாளர் என்கிற முறையில் உங்கள் பெயரும் பாதிக்கப்படும், காரணம் விவாததிற்கு யாரும் உள்ளே வருவது போல தெரியவில்லை. கிண்டல் செய்யவும் மலிவான விமர்சனம் செய்யவும் வருவது போலவே தெரிகிறது.. இது என் பார்வை.


மிக்க நன்றி
விக்னேஸ்வரன்
குப்புசாமிபேராக்

No comments:

Post a Comment