Thursday, March 26, 2009


எழுத்தாளர் நண்பர் கென் அவர்கள் எழுதிய சமீபத்திய கவிதை இது. இது குறித்து அஞ்சடியில் யாராவது விவாதமோ அல்லது கருத்து பகிர்தலோ செய்வதன்றால் வரவேற்க்கத்ததாகும். அல்லது நான் புதியதாக தொடங்கியுள்ள "கவிதைக்கான உரையாடல்" வலைப்பதிவில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வலைப்பதிவின் முகவரி : http://kavithai-purithal.blogspot.com/

பா.சிவம் கவிதைகளுக்குப் பிறகு நான் இரசித்துப் படித்தது கென் கவிதைகள் ஆகும்
.


ஏகாந்த பெருவெளியில் தனிமையின்
இரவினில் வருகிறாள்
பருத்த புட்டங்களையும் கொழுத்த முலைகளையும்
கொண்ட மோகப்பெண்

விரைப்பேறும் சயனத்தினில் அங்கங்களில்
முகம் புதைத்து கலவி யாத்திரையில்
மிருகமாய் தொடங்கிட
வளையல்கள் உடைத்து நகங்களால் கீறி
புணர்கிறாள் என்னை முகங்களை மாற்றி

சொட்டாய் துளிர்த்து பீறிட்டு முடிகையில்
விழிப்புத் தட்டுகிறது
ஆழ்மன உணர்வில் மாறிய முகங்களில்
பார்த்தது

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்

ஆக்கம்: கென்

அன்புடன்
கே.பாலமுருகன்

No comments:

Post a Comment