Thursday, April 2, 2009

அம்புலிமாமாக்களின் விவாதங்கள்

இந்த நாட்டின் தீவிர இலக்கியவாதிகளின் மீது எப்பொழுதுமே எனக்கு விமர்சனம் உண்டு. ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல மேடைகளில் "நாங்கள் ஒரு 10 பேர்தான் தீவிர இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அம்புலிமாமா கதை மாதிரி அல்லவா இருக்கு.

யார் அந்தப் பிதற்றலில் உள்ள 10 இலக்கியவாதிகள்/எழுத்தாளர்கள் என என்னால் சொல்ல முடியும்.

இவர்கள் எழுதுவதுதான் எழுத்தாம், இவர்கள் எழுதுவதுதான் இலக்கியமாம். பார்த்துக் கொள்ளுங்கள் பொது மக்களே. இவ்வளவு பகீகங்கரமாக தம்பட்டம் அடித்துக் கொண்டு எழுதி தள்ளுகிறார்கள். இந்த அம்புலிமாமாக்களின் விவாதம் அஞ்சடியில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் குபிரென்று சிரித்துவிட்டேன். அம்புலிமாம்மாக்களுக்குள் ரெண்டு பட்டால் விக்ரமாதித்தியன்களுக்குக் கொண்டாட்டமாம்.

இவர்களுக்கெல்லாம் ஒரு பெரிய வேதாளம் ஒன்று இருக்கிறது. அஞ்சடி எனும் அஞ்சடியை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனால் ஒரு இராஜெந்திரனை மட்டும்தான் எதிர்க்க முடியுமாம். அதன் வலிமை அவ்வளவுதான். வேதாளம் முருங்க மரம் ஏறிவிட்டதென புலம்புமாம். அதன் இதழின் மூலம் அப்பாவி இராஜெந்திரனை மட்டும்தான் எதிர்க்க முடியுமாம், காரணம் அவர்தான் மீண்டும் தட்டிக் கேட்க மாட்டார் போல. எங்கே அந்த வேதாளத்தை அரசாங்கத்தை எதிர்த்து மறியலில் ஈடுபட சொல்லு பார்ப்போம். பயம்? வேலை பறி போய்விட்டால்?

அந்த நவீன வேதாளம் தமது இதழின் முன் அட்டையின் பின்பகுதியிலும் பின் அட்டையின் முன் பகுதியிலும்’தமது ஆபாச கொச்சை கவிதைகளை போட்டுக் கொள்ளுமாம். 'ம.நவீன் கவிதைகள்' என்று, ஆனால் அதை யாராவது தட்டிக் கேட்டால், அது என் விருப்பம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளுமாம். சபாஷ் வேதாளம்! சபாஷ்!

தமிழன்பர்-
அண்ணாசாமிகோலாலம்பூர்

No comments:

Post a Comment