
'நந்தா' திரை படத்தில் சூரியாவிடம் ராஜ்கீரன் நன்றாக தண்ணி அடித்தபடி உணர்ச்சிப்பொங்க சொல்வார் 'நாமெல்லாம் கடவுளுக்குச் சமமானவர்கள்.யாரையும் கொல்ல உரிமை உண்டு'.அதைக்கேட்கும் போது சூரியாவின் கண்களில் உணர்ச்சி பொங்கும்.மிகத்துரிதமாக எதிரிகளை விளாசு விளாசு என விளாச கிளம்பிவிடுவார்.இந்த ஒரு வரியை ஒரு படம் முழுவது சொல்ல பாலா இத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டாம்.
சிறிய வயதில் காசியில் விட்டுச்செல்லும் தன் மகனை தேடிச் செல்கிறார் தந்தை.ஆர்யா ஒரு சித்தனாக ருத்திரனாக காட்சி கொடுக்கிறார்.தன் மகனை அடையாளம் கண்டு கொண்ட தந்தை அவனை வீட்டிற்கு அழைக்கிறார்.குருவின் ஆசியோடு ஆர்யா ஊருக்கு திரும்புவதும் அங்கே ஊனமுற்றவர்களை பிச்சைவாங்க வைத்து வயிறு வளர்க்கும் கூட்டத்தினரை அழிப்பதும் மீதிக்கதை.
படத்தில் வசனம் ஜெயமோகன்.'விஷ்ணுபுரம்' 'பின் தொடரும் நிழலின் குரல்' போன்ற தடித்த புத்தகங்கள் எழுதிய அதே ஜெயமோகன்.ஒரு A4 காகிதத்தில் அடங்கும் அளவுக்கு அடக்கமாக வசனம் எழுதியுள்ளார்.படத்தில் அவரது பங்களிப்பு வெரும் வசனத்தோடு இருந்திருக்கும் என்பது சந்தேகம்தான்.தனது 'ஏழாம் உலகம்' நாவலை மையமாக வைத்து நகர்த்தப்படிருக்கும் திரைக்கதையில் அவரது பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் என நம்பலாம்.அவர் 'ஆமாம்' என பெருமை படவும் பெரிதாக ஒன்றும் திரைக்கதையில் இல்லை என்பது வேறு விஷயம்.ஏழாம் உலகத்தின் நிழலைக்கூட பாலாவின் கடவுள் நெருங்கவில்லை.
அறிவாளிகள் அதிகம் சிந்திக்கக்கூடாது என்பதை முதலில் உணர்த்தியவர் கே.பாலசந்தர் பிறகு மணிரத்தினம் இப்போது பாலாவும் அதில் சேர்ந்து கொண்டிருக்கிறார்.ஊனமானவர்களைத் தேடிப்பிடித்ததும் இரண்டு மூன்று வருடங்கள் சிரமப்பட்டு அவர்களை நடிக்க வைத்தது என எல்லாம் சரி...இத்தனை உழைப்பும் எதற்கு?மீண்டும் தமிழ்ப்படத்திற்கே உரிய கதாநாயக கூஜாவை தூக்கிப்பிடித்து காட்டுவதற்குதான்.ஒன்றும் அறியாத அப்பாவி மக்களுக்காக போராட திடீரென தோன்றும் ரஜினியையும் விஜயகாந்தையும் அர்ஜூனையும் போலவே ஆர்யாவும் வடிவமைத்திருக்கிறார் பாலா.மக்கள் பிரமிக்க வேண்டுமே! இருக்கவே இருக்கிறார்கள் காசியில் சித்தர்கள்.அதிக தாடி ஸ்டைலான முடி மிரட்டும் பார்வை.நடக்கும் போதும் பார்க்கும் போதும் உயிரோட்டமான இளையராஜாவின் பின்னனி இசை.முடிந்தது. ரசிகர்களும் உலக திரைப்படதின் போஸ்டர்களைக்கூட காணாத விமர்சகர்களும் பாராட்ட அது போதும்.
படத்தில் இரண்டு கதைகள் ஒன்றாக நகர்கின்றன.முதலில் ஆர்யாவின் வாழ்வு மற்றது 'உருப்படிகளின்'(கதைப்படி) வாழ்வு.இவை இரண்டில் ஒன்றை உருப்படியாக சொல்ல முயன்றிருந்தாலும் படம் மனதில் நின்றிருக்கும்.சிறுவயதிலிருந்தே காசியில் உள்ள ஒரு பிரிவு சாமியார்களோடு தன்னை ஒரு கடவுளாக எண்ணி வாழும் ஒருவன் தனது குடும்பத்தில் இணையும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அதன் பலகீனங்களோடு சொல்ல முயன்றிருக்கலாம்.(அப்படியும் இல்லை.ஆர்யாவை சிவனுக்கு ஒப்பாகப் பேசுகிறார் அந்த ஊர் சாமியார்.)அல்லது அங்கவீனர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தாமல் 'பிதாமகனில்' சம்பந்தமே இல்லாமல் சிம்ரனை பழைய பாட்டுக்கு ஆடவிட்டு பணம் பண்ணியது போல இதில் திருநங்கயையும் போலி எம்.ஜி.ஆர் சிவாஜியையும் ஆடவிடாமலாவது இருந்திருக்கலாம்.குறைந்த பட்சம் எந்தக் கதாநாயகனும் வந்து காப்பாற்றாமல் அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் படியாவது இருந்திருக்கலாம்.அப்படி அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடியாத பாவப்பட்ட ஜென்மங்கள் என பாலா அறிவாளித்தனமாகப் பேசினால் அவர்களைத் தற்கொலை செய்யவாவது வைத்திருக்கலாம்.பாலாவின் கூற்றுப்படி(சித்தர்களின் கூற்றாம்) வாழமுடியாதவர்களை கொல்வது தர்மம் என்றால் அவர்களே தற்கொலை செய்து இறப்பதும் தர்மமாகியிருக்கும்.அது வில்லனுக்கு தண்டனையாகவும் இருந்திருக்கும்.
இதையெல்லாம் விட்டு விட்டு பலவீனமானவர்களை பலவீனமானவர்களாகவே காட்டும் போக்கும்...ஒரு சமூகத்தின் பகுதியை காப்பாற்ற இன்னமும் திடுதிப்பென ஒரு தனி மனிதன் தோன்றுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய கேலிக்குரலாகவே கேட்கிறது.
பலவீனமானவர்கள் இன்னமும் கதாநாயகர்களுக்குக் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
'அப்படியெல்லாம் இல்ல சார்.பாலா படத்த நல்லா தான் எடுத்திருப்பாரு.சென்சார்ல வெட்டிடதனால படம் இப்பிடி ஆச்சி' என பாலாவின் ரசிகர்கள் சப்பை கட்டலாம்.நியாயம்தான்.
இன்னும் சிலர் 'பாலா இந்தப்படதுல கடவுள் இல்லனு சொல்ல வரார்.அத சரியா சொல்லல' என்றும் கூறலாம்.
என்னைப்பொறுத்தவரை இதில் எனக்கு கடவுளோ கலையோ மயிரோ முக்கியம் கிடையாது.மனிதன் தான்.
ம.நவீன்
சிறிய வயதில் காசியில் விட்டுச்செல்லும் தன் மகனை தேடிச் செல்கிறார் தந்தை.ஆர்யா ஒரு சித்தனாக ருத்திரனாக காட்சி கொடுக்கிறார்.தன் மகனை அடையாளம் கண்டு கொண்ட தந்தை அவனை வீட்டிற்கு அழைக்கிறார்.குருவின் ஆசியோடு ஆர்யா ஊருக்கு திரும்புவதும் அங்கே ஊனமுற்றவர்களை பிச்சைவாங்க வைத்து வயிறு வளர்க்கும் கூட்டத்தினரை அழிப்பதும் மீதிக்கதை.
படத்தில் வசனம் ஜெயமோகன்.'விஷ்ணுபுரம்' 'பின் தொடரும் நிழலின் குரல்' போன்ற தடித்த புத்தகங்கள் எழுதிய அதே ஜெயமோகன்.ஒரு A4 காகிதத்தில் அடங்கும் அளவுக்கு அடக்கமாக வசனம் எழுதியுள்ளார்.படத்தில் அவரது பங்களிப்பு வெரும் வசனத்தோடு இருந்திருக்கும் என்பது சந்தேகம்தான்.தனது 'ஏழாம் உலகம்' நாவலை மையமாக வைத்து நகர்த்தப்படிருக்கும் திரைக்கதையில் அவரது பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் என நம்பலாம்.அவர் 'ஆமாம்' என பெருமை படவும் பெரிதாக ஒன்றும் திரைக்கதையில் இல்லை என்பது வேறு விஷயம்.ஏழாம் உலகத்தின் நிழலைக்கூட பாலாவின் கடவுள் நெருங்கவில்லை.
அறிவாளிகள் அதிகம் சிந்திக்கக்கூடாது என்பதை முதலில் உணர்த்தியவர் கே.பாலசந்தர் பிறகு மணிரத்தினம் இப்போது பாலாவும் அதில் சேர்ந்து கொண்டிருக்கிறார்.ஊனமானவர்களைத் தேடிப்பிடித்ததும் இரண்டு மூன்று வருடங்கள் சிரமப்பட்டு அவர்களை நடிக்க வைத்தது என எல்லாம் சரி...இத்தனை உழைப்பும் எதற்கு?மீண்டும் தமிழ்ப்படத்திற்கே உரிய கதாநாயக கூஜாவை தூக்கிப்பிடித்து காட்டுவதற்குதான்.ஒன்றும் அறியாத அப்பாவி மக்களுக்காக போராட திடீரென தோன்றும் ரஜினியையும் விஜயகாந்தையும் அர்ஜூனையும் போலவே ஆர்யாவும் வடிவமைத்திருக்கிறார் பாலா.மக்கள் பிரமிக்க வேண்டுமே! இருக்கவே இருக்கிறார்கள் காசியில் சித்தர்கள்.அதிக தாடி ஸ்டைலான முடி மிரட்டும் பார்வை.நடக்கும் போதும் பார்க்கும் போதும் உயிரோட்டமான இளையராஜாவின் பின்னனி இசை.முடிந்தது. ரசிகர்களும் உலக திரைப்படதின் போஸ்டர்களைக்கூட காணாத விமர்சகர்களும் பாராட்ட அது போதும்.
படத்தில் இரண்டு கதைகள் ஒன்றாக நகர்கின்றன.முதலில் ஆர்யாவின் வாழ்வு மற்றது 'உருப்படிகளின்'(கதைப்படி) வாழ்வு.இவை இரண்டில் ஒன்றை உருப்படியாக சொல்ல முயன்றிருந்தாலும் படம் மனதில் நின்றிருக்கும்.சிறுவயதிலிருந்தே காசியில் உள்ள ஒரு பிரிவு சாமியார்களோடு தன்னை ஒரு கடவுளாக எண்ணி வாழும் ஒருவன் தனது குடும்பத்தில் இணையும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அதன் பலகீனங்களோடு சொல்ல முயன்றிருக்கலாம்.(அப்படியும் இல்லை.ஆர்யாவை சிவனுக்கு ஒப்பாகப் பேசுகிறார் அந்த ஊர் சாமியார்.)அல்லது அங்கவீனர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தாமல் 'பிதாமகனில்' சம்பந்தமே இல்லாமல் சிம்ரனை பழைய பாட்டுக்கு ஆடவிட்டு பணம் பண்ணியது போல இதில் திருநங்கயையும் போலி எம்.ஜி.ஆர் சிவாஜியையும் ஆடவிடாமலாவது இருந்திருக்கலாம்.குறைந்த பட்சம் எந்தக் கதாநாயகனும் வந்து காப்பாற்றாமல் அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் படியாவது இருந்திருக்கலாம்.அப்படி அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடியாத பாவப்பட்ட ஜென்மங்கள் என பாலா அறிவாளித்தனமாகப் பேசினால் அவர்களைத் தற்கொலை செய்யவாவது வைத்திருக்கலாம்.பாலாவின் கூற்றுப்படி(சித்தர்களின் கூற்றாம்) வாழமுடியாதவர்களை கொல்வது தர்மம் என்றால் அவர்களே தற்கொலை செய்து இறப்பதும் தர்மமாகியிருக்கும்.அது வில்லனுக்கு தண்டனையாகவும் இருந்திருக்கும்.
இதையெல்லாம் விட்டு விட்டு பலவீனமானவர்களை பலவீனமானவர்களாகவே காட்டும் போக்கும்...ஒரு சமூகத்தின் பகுதியை காப்பாற்ற இன்னமும் திடுதிப்பென ஒரு தனி மனிதன் தோன்றுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய கேலிக்குரலாகவே கேட்கிறது.
பலவீனமானவர்கள் இன்னமும் கதாநாயகர்களுக்குக் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
'அப்படியெல்லாம் இல்ல சார்.பாலா படத்த நல்லா தான் எடுத்திருப்பாரு.சென்சார்ல வெட்டிடதனால படம் இப்பிடி ஆச்சி' என பாலாவின் ரசிகர்கள் சப்பை கட்டலாம்.நியாயம்தான்.
இன்னும் சிலர் 'பாலா இந்தப்படதுல கடவுள் இல்லனு சொல்ல வரார்.அத சரியா சொல்லல' என்றும் கூறலாம்.
என்னைப்பொறுத்தவரை இதில் எனக்கு கடவுளோ கலையோ மயிரோ முக்கியம் கிடையாது.மனிதன் தான்.
ம.நவீன்